என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கும்பம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
புது வசந்தம் பிறக்கும் வாரம். ராசி அதிபதி சனி வக்ரம் பெற்றாலும் தன, லாப அதிபதி குரு சுக ஸ்தானத்தில் நிற்பதால் தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். தந்தை வழி உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முக்கிய தேவைகள் நிறைவேறும். தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும். வீடு கட்ட, அல்லது புதிய தொழில் தொடங்க கடன் கிடைக்கும்.
குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஆன்ம பலம் பெருகும். உடல் தேஜஸ் பெருகும். திருமண வாய்ப்புகள் உடனே தேடி வரும்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும்.பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு.பித்ருக்களின் நல் ஆசி யால் நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை உண்டு. புண்ணிய சேத்தி ரங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். உத்தியோ கஸ்தர்களுக்கு வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்