என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மகரம்
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
சுபமான வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி செய்வதால் எதை யும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.சிலருக்கு தத்து புத்திர யோகம் கிடைக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப உறவுகளின் உறவு நிலை மேம்படும்.
வெளி வட்டாரங்களில் மரியாதைகள் உயரும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கவுரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். பணி நிரந்தரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வரும். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் நலனுக்காக எடுக்கும் திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் நிறை வேறும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். பண வரவுகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சமாளிக்க முடியும். நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்