search icon
என் மலர்tooltip icon

    சிம்மம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    நினைத்ததை உடனே செய்ய விரும்பும் சிம்ம ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன லாபாதிபதியான புதனோடும், பாக்கியாதிபதியான செவ்வாயோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே இந்த மாதம் யோகமான மாதம்தான். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் லாபம் கிடைக்கும். அஷ்டமத்தில் ராகு சஞ்சரித்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதுமே மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. 8-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் பூர்வீகச் சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கும். பிரி வினையான சொத்துகள் திருப்தியாக இல்லையே என்று உடன்பிறப்புகள் பஞ்சாயத்தார்களை அணுகுவர்.

    உறவினர்களின் அனுசரிப்பு கொஞ்சம் குறையலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதி குரு என்பதால் எதிர்பாராத விதத்தில் மனநிறைவு தரக்கூடிய ஒருசில காரியங்களும் நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வழிவகுத்துக் கொள்வீர்கள்.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சகாய ஸ்தானாதிபதியான சுக்ரன் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே ஆரம்பத்தில் சில விஷயங்கள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம். சில காரியங்கள் முடியாமல் இழுபறி நிலையில் இருக்கலாம். ஆனால் கார்த்திகை 14-ம் தேதி சுக்ரன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகி வந்த பின்னால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே மாதத்தின் பிற் பகுதியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் ஏராளமாக வரலாம். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு- புதன்

    உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங் களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான யோகங்களும் நன்மைகளும் கிடைக்கும் நேரமிது.

    குறிப்பாக பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். சேமிப்ப உயரும். செயல்பாடுகளில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அயல்நாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வரலாம்.

    ×