என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்தான 'செயலி' தொடக்கம்
- விஜய் சமீபகாலமாக ரசிகர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்துப் வருகிறார்.
- இவர் ரசிகருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சமீபகாலமாக ரசிகர்களைச் சந்தித்துப் வருகிறார். முன்பாக சேலம், திருப்பூர், அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இதற்காகக் காலையிலிருந்தே பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமையகத்தில் 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "தளபதி விஜய் விழியகம்" கண்தானம் செயலி தொடங்கப்பட்டு உள்ளது. கண்பார்வைக்காக பிறர் உதவியை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவும் வகையில் செயல்படும் "தளபதி விஜய் விழியகம்" செயலியை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.
இதனை விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் கண் தானம் செய்ய முன் வருபவர்கள் பற்றிய விபரங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும் உதவி தேவைப்படும் நபர்களுக்கு உடனுக்குடன் உதவ முடியும் என்றனர்.
இதற்கு முன்பு மக்கள் இயக்கம் சார்பில் குருதிக் கொடை செயலி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்