search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை.
    • பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

    இறைவனை தீபமேற்றி வணங்குவதுதான் நமது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றுவதும், தினமும் தீபமேற்றுவதும் கடவுளை பூஜிக்கிற முக்கியமான சடங்குகளில் ஒன்றாக உள்ளது.

    பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்படுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    தீபங்கள் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:

    நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவிதமான சந்தோஷமும் வீட்டில் நிறைந்திருக்கும்.

    நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லா கஷ்டங்களும் தொலைந்து போகும்.

    விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

    கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.

    மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.

    வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

    தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுனம் என அஞ்சப்படுகிறது.

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

    கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம்.

    எள் எண்ணெய் தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    • மகா பிரத்தியங்கிராதேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும்.
    • கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    தூத்துக்குடி மகா பிரத்தியங்கிரா தேவியை வியாழக்கிழமை காலை சந்தனக் காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் 'அணிவித்து சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

    மகா பிரத்தியங்கிராதேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும்.

    கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    மாதம் தோறும் அஷ்டமி, அமாவாசை பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஆடி, தைத்திருநாள், தை அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    ஆண்டு தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை ஒன்று அன்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

    உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் மக்கள் நோய்,-நொடியின்றி நலமாக வாழ வேண்டியும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது.

    இதுபோன்றே மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

    வாழ்வில் மனத்துன்பம் போக்குவதுடன் எதிரிகளின் ஏவல்களை ஒழித்து, வேண்டும் வரத்துடன் நல்வாழ்வும் தரும் சித்தர் நகர் மகா பிரத்தியங்கிராதேவி மகா காலபைரவரை நாமும் வணங்கி நல்வாழ்வு பெற்றிட இன்றே ஆலயம் சென்று தரிசித்திடுவோம்.

    • இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும்.
    • முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும்.

    தென் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரம்மாண்டமான வடிவில் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

    கேரளாவின் கட்டிடக்கலை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கிரா தேவி மற்றும் கால பைரவருக்கு ஒரே கல்லில் ஆன 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    ஆலயத்தின் மூலவராக மகா பிரத்தியங்கிராதேவி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூப கோலத்தில் மகா கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    ஆலய வளாகத்தில் தட்சிணாமூர்த்தி குரு மகாலிங்கேஸ்வரராக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இவரை வணங்கினால் குழந்தைபேறு, தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    ஆலய வளாகத்தில் மங்கலம் தரும் சனீஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, வீரணார், சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, நாகலிங்கம், முனீஸ்வரர், குருபகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காளி ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர்.

    சனிக்கிழமை தோறும் ஆலயத்தில் உள்ள மங்கலம் தரும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன.

    இவ்வாலயம் சாஸ்திரப்படி இயற்கையாகவே இடுகாடு, சுடுகாட்டுக்கு எதிரில் அமைந்துள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும்.

    இங்குள்ள பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும்.

    புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.

    ஏவல், பில்வி, சூனியம் போன்ற கெடுதல்கள் அண்டாது. அரசியலில் மேன்மை கிடைக்கும்.

    அரசு வேலை, பதவி உயர்வு கிட்டும் என்பது ஐதிகமாகும்.

    இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும்.

    முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும்.

    ஞயிற்றுக்கிழமை தோறும் கால பைரவர், சரபேஸ்வரருக்கு ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    • பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும்.
    • புத்திர பாக்கியம் கிட்டும்

    -"ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிக்வே

    கராள தம்ஷ்டரே பிரத்யங்ரே

    க்ஷம் க்ரீம் கூம் ப்பட்"

    என்ற பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரத்தை நாள்தோறும் சொல்லி வந்தால் வாழ்வில் பில்லி, சூனியம் உள்ளிட்ட பிணிகள் எதுவும் நம்மை அண்டாது.

    அகங்காரமும், ஆணவமும் கொண்ட இரண்யகசிபுவை அழிக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார் பகவான் நாராயணன்.

    கோர ரூபத்தில் வெளிப்பட்ட நரசிம்மர் இரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து, ரத்தத்தைக் குடித்து, அவனைக் கொன்று ஆணவத்தை அழித்தார்.

    சம்ஹாரம் முடிந்த பின்பு நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க உருவாக்கப்பட்ட சரபேசுவரரின் இரு இறக்கைகளில் ஒன்றாக பிரத்தியங்கிரா தேவி பத்திரகாளியால் உருவாக்கப்பட்டாள்.

    பிரத்தியங்கிராதேவி சிங்கமுகத்துடன் ஆயிரம் திருமுகங்களும், இரண்டாயிரம் கைகளும் சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரமும், கரிய நிறமும், நீலநிற ஆடையும் அணிந்த விஸ்வரூபத்தினை உடையவள்.

    கருணை உள்ளம் கொண்ட அன்னையான மகா பிரத்தியங்கிராதேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை அருள் மழையாய் பொழிந்து காத்து வருபவள் ஆவாள்.

    பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.

    • மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது.
    • மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.

    மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது.

    மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.

    காப்புக் கடவுளாக விளங்குகிறாள் பிரத்தியங்கிரா தேவி.

    வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்தே குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.

    பயத்தை அகற்றுபவள், தைரியத்தை கொடுப்பவள், தெரிந்தும் தெரியாமலும் வரும் பகையை முறியடிப்பவள் பிரத்தியங்கிரா தேவி, சத்ருவிடம் ஜெயம் சேர்ப்பாள்.

    இவளை உபாசிக்க நமக்கு மன உறுதி, தனித்தகுதி அவசியம். நல்லெண்ணம், நற்செய்கைகள், தேவியின் மீது உயர்ந்த பக்தி, இருப்பின் எண்ணம் யாவும், வெற்றி உண்டாகும். லட்சியம் நிறைவேறும்.

    • திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது.
    • புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.

    திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது.

    புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.

    ஜிப்மரில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். மொட்டாண்டியில் நவாப் ராஜமாணிக்கம் வீதியில் கோவில் இருக்கிறது.

    காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்து இருக்கும்.

    நாள் தோறும் 108 நாமாவளி அர்ச்சனை, 1008 நாமாவளி அர்ச்சனைகள் நடக்கின்றன.

    • கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது.
    • கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

    புதுவை பிரத்தியங்கிரா தேவிக்கு அருகில் லிங்கம், பைரவர், பிரளய விநாயகர், நரசிம்மர் சிலைகள் இருக்கின்றன.

    கோவில் உள்ளே 'பாதாள பரமேஸ்வரி' சன்னதி இருக்கிறது. படிகளில் இறங்கிச்சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது.

    கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

    புளியோதரை, தயிர்சோறு, எள்ளுருண்டை செய்து எடுத்து வரலாம்.

    எலுமிச்சை, திராட்சை பழம் கொண்டு வரலாம். செவ்வரளி, சிவப்பு ரோஜா, செந்தாமரை இதழ்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    • திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
    • குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புதுவை பிரத்தியங்கரா தேவி கோவிலில் அஷ்டமி யாகம் மிகச்சிறப்பானது.

    பவுர்ணமியை அடுத்து வரும் 8 வது நாள் தேய்பிறை அஷ்டமியில் இரவு 10.30 மணிக்கு யாகம் தொடங்கும்.

    நள்ளிரவு 3 மணிக்கு முடியும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் இந்த யாகம் நடக்கிறது.

    'அஷ்டமி தரிசனம் அஷ்ட ஐஸ்வரியம் தரும்' என்பது சிரபசித்தர் வாக்கு.

    இந்த யாகத்தில் கலந்துகொண்டால் ஏவல், செய்வினை விலகிச் செல்லும்.

    நோய்கள் தீரும். குடும்ப கவலைகள் மாறும்.

    வியாபாரம், தொழில் தடைகள் நீங்கி வளர்ச்சி அடையும். கைவிட்டுப்போன சொத்துக்கள் மீளும்.

    திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

    குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜை நடக்கிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.

    இந்த பூஜைகளில் கலந்து கொள்கிறவர்களும் பல நன்மைகள் அடைவார்கள் என்கிறார்கள்.

    • நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.
    • பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.

    இந்த பிரத்தியங்கிரா தேவியின் விஸ்வரூப சிலை புதுவையில் இருக்கிறது. 72 அடி உயரம்.

    உலகிலேயே மிகப்பெரிய அம்மன் சிலை இதுதான்.

    குகை போன்ற பெரிய வாய், ரத்தம் சொட்டும் நீண்ட நாக்குகள், விரிந்த கூந்தல், காலில் மிதிபடும் மண்டை ஓடு, கனல் கக்கும் கண்கள், கைகளில் திரிசூலம், நாகபாசம், கழுத்தில் ராகு, கபாலத்தை மாலையாக அணிந்து இருக்கிறார்.

    நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.

    பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.

    இதனால் 'அபராஜிதா' என்று பெயர் பெற்றாள். நடுநிசி பூஜைதான் பிரத்தியங்கிரா தேவிக்கு உகந்தது.

    மகாபைரவர் நாள்தோறும் நள்ளிரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

    • சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி.
    • ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.

    இரணியனை வதைக்க நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரணியனை கொன்றபின்பும் உக்கிரம் அடங்கவில்லை.

    அவரது உக்கிரத்தால் மூவுலகும் அழிந்துவிடும் போல இருந்தது.

    அப்போது தோன்றி, அவரது உக்கிரத்தை கிரகித்து சாந்தப்படுத்தி உலகத்தை அழிவில் இருந்து காத்தாள் பிரத்தியங்கிரா தேவி.

    சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி.

    ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.

    அவள் பார்வதியின் அம்சம். அவளே காளி, துர்க்கை.

    பில்லி சூனியம், மந்திரம் தந்திரம், எந்திரம் ஏவல் எல்லாவற்றையும் முறியடித்து காக்கக்கூடியவள் பிரத்தியங்கிரா தேவி.

    இவளையே அதர்வண வேதம் 'அதர்வண பத்ரகாளி' என்று கூறுகிறது. நோய்கள், பேய்களை ஓட்டக்கூடிய ஆற்றல் படைத்தவள்.

    தன்னைத்தேடி வரும் பக்தர்களின் கவலைகளை போக்கி நலம், வளம் தருவதில் ஈடு இணையற்றவள் பிரத்தியங்கிரா தேவி.

    • அபயம் என்று அலறிப் பணிந்த உயிர்களைக் காக்கும் அற்புத தேவி இந்தப் பிரத்தியங்கிரா. அதர்வணப் பத்ரகாளியும் இவளே.
    • இவளை வழிபடும் எவரும் துன்பத்தின் நிழல்கூட தன் மீது படாமல் வாழ்வார்கள்.

    சென்னை, தாம்பரம், சேலையூர் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ளது பிரத்தியங்கிரா தேவி ஆலயம்.

    இரணியனைக் கொல்ல திருமால் நரசிம்ம மூர்த்தி அவதாரம் எடுத்து இரணியனைக் கொன்றார்.

    ஆனாலும் அவரது கோபம் தணியவில்லை. இரணியனின் ரத்தத்தைத் தீண்டியதன் விளைவு நரசிம்மனின் உக்கிரம் அதிகமாகியது.

    நரசிம்மர் பெரிய உருவங்கொண்டு அகில உலகமே நடுங்கும்படி பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்தார்.

    இவரது கோபத்தை அடக்க சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவம் கொண்டு அவரைச் சாந்தப்படுத்த முயன்றார்.

    ஆயினும் திருமாலின் கோபம் தணியாமல் இருக்கவே தனது நெற்றிக்கண்ணில் இருந்து பிரத்யங்கிரா காளியைத் தோற்றுவித்தார்.

    ஸ்ரீ சாந்தானந்தா சுவாமிகள் சென்னை, ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள கந்தாஸ்ரமத்தில் இந்த பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் அமைத்துள்ளார்.

    இந்த ஆலயத்தில் ஸ்ரீபுவனேஸ்வரியும், சுவாமிநாதனும் எதிரெதிரே தனித்தனியாகக் கோவில் கொண்டிருக்கிறார்கள்.

    இவர்களையடுத்து ஸ்ரீசரபேஸ்வரரும் ஸ்ரீபிரத்தியங்கிராவும் தனித்தனியே கோவில் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நான்கு திருவடிகளுக்கும் மத்தியில் அழகான தியான மண்டபம் அமைந்துள்ளது.

    அபய, வரத முத்திரைகள் தாங்கி பாசமும் அங்குசமும் தரித்தவளாக அன்பும் சாந்தமும் நிறைந்த திருமுகத்தினளாய் பேரழகுடன் வீற்றிருக்கிறாள் ஸ்ரீபுவனேஸ்வரி.

    அகில உலகத்தையே ஆளும் அந்த நாயகியின் பக்கத்தில் முருகப்பெருமான் இடக்கையை ஊர்ஹஸ்தமாகவும் வலக்கரத்தில் தண்டூன்றியும் காட்சி தருகிறார்.

    பறவை, விலங்கு, மனிதன் மூன்றும் கலந்த வடிவாய். தலையில் பிறை நிலா விளங்க மான், மழு, நாகம், தீ, இந்நான்கையும் ஏந்திய கரத்தினராய்க் காட்சி தருகிறார். ஸ்ரீசரபேஸ்வரர்.

    இவர் ஸ்ரீநரசிம்மரின் ஆவேசத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபெருமானால் மேற்கொள்ளப்பட்ட திருவடிவம்.

    சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.

    இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உள்ள சிறப்பு அம்சம் இதுவாகும்

    இந்தப் பிரத்தியங்கிரா தேவி டமருகம், பாசம், கபாலம், சூலம் நான்கையும் தரித்தவளாய் சிம்ம வாகனத்தில் அமர்ந்து ஒளிதரும் பெரு விழிகளும், தெற்றுப்பற்களும், கோரைப்பற்களும் துலங்க காட்சி தருகிறாள்.

    தலைக்கு மேலே நாகம் குடையாய் கவிழ்ந்திருக்கிறது.

    பாதத்து அருகே காளியின் மந்திரத்தை வெளிப்படுத்திய அங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் ஆகிய இரு முனிவர்களும் கைகூப்பித் தொழுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அரிய தரிசனங்களாக பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் தத்தாத்ரேயரின் வடிவங்கள் ஆகிய சிலைகள் காட்சி தருகின்றன.

    அபயம் என்று அலறிப் பணிந்த உயிர்களைக் காக்கும் அற்புத தேவி இந்தப் பிரத்தியங்கிரா. அதர்வணப் பத்ரகாளியும் இவளே.

    இவளை வழிபடும் எவரும் துன்பத்தின் நிழல்கூட தன் மீது படாமல் வாழ்வார்கள்.

    இந்தக் காளியை வழிபடும் எவரையும், யாரும் பகைப்பதோ, விரோதிப்பதோ கூடாது.

    பிரத்யங்கிரா தேவியை தியானிப்பவர்களிடம் பகைமை பாராட்டக்கூடாது.

    அப்படி பக்தர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்கின்றாள் இந்தப் பிரத்தியங்கிரா தேவி.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.
    • தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    சென்னை:

    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது.

    ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம், தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.

    ஆனால் தேங்காய் உடைப்பதில் ஒரு சிறிய தத்துவ தகவல். இதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    தேங்காயின் மேல் கடுமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும், அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும்.

    உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது.

    ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சன்னிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தைக் காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால்தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.

    ×