search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும்.
    • இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும்.

    புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும்.

    இந்த காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

    தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும் தட்சிணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும்.

    தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

    அதேபோல், வாய்ப்பு இருப்பவர்கள், கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

    • இந்த விரத நாளில், அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.
    • இதனால் குடும்பம் செழிக்கும்.

    மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது.

    ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. 'எங்களை நீ பீடிக்காதே!' என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

    தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

    கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.

    அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது.

    அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.

    பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

    • இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும்.
    • சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    ஸித்தி விநாயக விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது.

    பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.

    சஷ்டி - லலிதா விரதம்:

    புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

    அமுக்தாபரண விரதம்:

    புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள்.

    இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும்.

    சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    • 21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.
    • பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    இதுகுறித்து கௌதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ''புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும்.

    சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார்.

    உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!" என்றார்.

    வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.

    பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.

    • அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.
    • அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும்.

    பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர்.

    ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார்.

    இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள்.

    அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

    இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள்.

    வனம் ஒன்றில் கௌதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள்.

    அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கௌதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார்.

    அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

    அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.

    குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.

    • பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும்.
    • இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    திருப்பதி பிரம்மோற்சவம் வைபவத்தில் மற்ற ஸேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா?

    செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள்.

    அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம்.

    அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன்.

    அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர்.

    அவர்களை தியானிப்பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்' என்பது ஐதீகம்.

    இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு.

    இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும்.

    தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோஸ்வத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

    • கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோவில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும்.
    • அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது.

    முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளயபட்சம் வருவதும் புரட்டாசி மாதத்தில்தான்.

    ஆகவேதான், புரட்டாசி வழிபாடுகள் இரட்டிப்பு பலன் தரும் எனச் சொல்லிவைத்தார்கள் பெரியோர்கள்.

    மகத்துவமான அந்த விரத வழிபாடுகளை நாமும் விரிவாக அறிவோமா?

    கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோவில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும்.

    அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது.

    வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். 

    • தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி.
    • இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர்.

    தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி.

    இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர்.

    ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி.

    இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை.

    அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி,

    லலிதா சஷ்டி விரதம்,

    உமாமகேஸ்வர விரதம்,

    கேதார கௌரி விரதம்,

    பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம்,

    ஜேஷ்டா விரதம்

    ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

    • பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி
    • திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

    ஓம் அருவாம் உருவாம் முருகாபோற்றி

    திருவார் மறையின் செம்பொருள்போற்றி

    ஆறுமுகத்தெம் அரசேபோற்றி

    மாறுகொள் சூரரை வதைத்தாய்போற்றி

    இருள்கெடுத்திருன்பருள் எந்தாய்போற்றி

    உருள்பூங்கடம்பணி உறவோய்போற்றி

    ஈசற்கு இனிய சேயேபோற்றி

    மாசறு திருவடி மலரோய்போற்றி

    உறுநர்த் தாங்கும் உறவோய்போற்றி

    செறுநர்த் தேய்த்த செவ்வேள்போற்றி

    ஊனில் ஆவியார் உயிர்போய்போற்றி

    கானில் வள்ளியின் கணவபோற்றி

    எழில்கொள் இன்ப வாரிதிபோற்றி

    அழிவிலாக் கந்தனாம் அண்ணல்போற்றி

    ஏறுமயிலூர்ந்த தேகுவாய்போற்றி

    கூறுமன்பர்க்குக் குழைவாய்போற்றி

    ஐயனாய் உலகை ஆக்குவாய்போற்றி

    செய்ய மேனியனே தேவேபோற்றி

    ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய்போற்றி

    பருவம் முதிராப் பண்பேபோற்றி

    ஓவற இமைக்கும் ஒளியேபோற்றி

    மாமுதல் தடிந்த மறவபோற்றி

    ஒளவியம் அறுத்தோர்க்கு அருள்வோய்போற்றி

    தெய்வம் எல்லாந்தொழும் செய்யாபோற்றி

    எக்கும் வேலுடை இறைவாபோற்றி

    வெக்குதல் அற்றார் விளக்கேபோற்றி

    கந்தா மணமார் கடம்பாபோற்றி

    காப்பாய் படைப்பாய் கழிப்பாய்போற்றி

    மூப்பீறற்ற முதல்வாபோற்றி

    கிள்ளை மொழியுமை பிள்ளாய்போற்றி

    கள்ளப் புலனைக் களைவாய்போற்றி

    கீழறும் அடியர் கிழவோய்போற்றி

    குன்றும் குழைந்தோட் குமரபோற்றி

    என்றும் இளைய ஏறேபோற்றி

    கூம்புகைத் தேவர் கோவேபோற்றி

    பாம்பணி சிவனார் பாலகபோற்றி

    கெண்டைக் கண்ணியர் கேள்வபோற்றி

    அண்டினோர்க் கருளும் அங்கணபோற்றி

    கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய்போற்றி

    வீடில் வீடருள் விமலபோற்றி

    கைவேல் கொண்ட காவல்போற்றி

    நைவேற் கருள்வாய் நாயகபோற்றி

    கொடைக் கடன்கொண்ட குழகபோற்றி

    படைக்கடல் தலைவ பரனேபோற்றி

    கோதில் அமிழ்தே குருமணிபோற்றி

    போதில் அமர்ந்த பொன்னேபோற்றி

    சிவபிரான் கண்வரு சேயேபோற்றி

    நவ சரவணத்தில் நகர்ந்தாய்போற்றி

    அறுவுரு அமைந்தே ஆடினாய்போற்றி

    அறுமீன் பாலுண் அமரபோற்றி

    பெருமை பிறங்கு பெரியோய்போற்றி

    நான் முகமைச் சிறை நாட்டினாய்போற்றி

    மான்மகள் வள்ளியை மணந்தாய்போற்றி

    செங்கண் கடாவைச் செலுத்தினாய்போற்றி

    அங்கண் குறிஞ்சிக்கு அரசேபோற்றி

    இறைவனுக்கரும்பொரள் இசைந்தாய்போற்றி

    மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய்போற்றி

    பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி

    திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

    ஆவிணன் குடி ஆண்டாய்போற்றி

    மேவி ஏரகம்வாழ் மிக்கவபோற்றி

    குன்று தோறாடும் குழந்தாய்போற்றி

    துன்று பழமுதிர் சோலையாய்போற்றி

    திசைமுகம் விளக்கும் செம்முகபோற்றி

    இசைபெரு வேள்வி அன்முகபோற்றி

    செங்களம் ஓர்க்கும் திருமுகபோற்றி

    மங்கல மான வானவபோற்றி

    வள்ளிபால் நகைகொள் மாமுகபோற்றி

    திங்களின் ஒளிரும் சீர்முகபோற்றி

    ஆர்வலர் ஏத்த அருள்முகபோற்றி

    சீர்வளர் அழகின் செல்வாபோற்றி

    மணிமுடி புணையாறணிமுடிபோற்றி

    துணையடி தொழுவார்க் கணைவாய்போற்றி

    செவியீராறுடைச் செம்மால்போற்றி

    கவித்தொடை புனைந்தோட் கந்தாபோற்றி

    பன்னிரு கண்ணுடைப்பண்ணவபோற்றி

    என்னிரு கண்ணின் இலகுவோய்போற்றி

    பொருவில் ஒருவனாம் புலவபோற்றி

    அருணகிரிக்கு அருள் அமலபோற்றி

    நக்கீரற் கருள் நாதாபோற்றி

    தக்க சங்கத்தமிழ் தந்தாய்போற்றி

    குமர குருபரற் கருளினைபோற்றி

    பந்த பாசங்களைப் பறிப்போய்போற்றி

    கந்தபுரி வாழ் வுகந்தோய்போற்றி

    தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய்போற்றி

    பொய்யிலான மனத்துட் புகுவோய்போற்றி

    கோழி வெல்கோடிக்கோவேபோற்றி

    ஊழி தோறூழி உள்ளாய்போற்றி

    செய்யாய் சிவந்த ஆடையாய்போற்றி

    மெய்யெல்லாம் வெண்ணீறணிவோய்போற்றி

    மேவலர் மடங்கலாம் முத்தபோற்றி

    வேர்கள் சிறைமீள் சீர்வலாய்போற்றி

    சேவலும்மயிலும ¢சேர்த்தோய்போற்றி

    போர்மிகு பொருந புரநல போற்றி

    ஏர்மிகு இளஞ்சேய் தார்விலாய்போற்றி

    பாரகம் அடங்கலும் பரவுவோய்போற்றி

    தமிழ்மொழி இன்பில் தழைப்பாய்போற்றி

    அமிழ்திற்குழைத்த அழகாபோற்றி

    கல்வியும் செல்வமும் கனிந்தருள்போற்றி

    இன்பார் இளைய ஏந்தால்போற்றி

    என்பால் அருள்புரி என்றும்போற்றி போற்றியே...

    • ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.
    • எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    ஒருவருக்கு நவராத்திரி நாட்களில் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவர் நவராத்திரி எட்டாவது தினமான அஷ்டமி தினம் அவசியம் பூஜிக்க வேண்டும்.

    ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.

    எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபாலன் இல்லத்தில் அவதரித்தாள்.

    ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.

    சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும்.

    இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.

    • தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.
    • தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

    தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.

    இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.

    மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது.

    ஒருவரது ஜாதகத் தில் குரு பலம் இல்லை யென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குருபார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

    மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி.

    அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் செய்ய வேண்டும்.

    • எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்
    • எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    1. தன லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    2. வித்யா லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    3. தான்ய லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    4. வீர லட்சுமி

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    5. சௌபாக்ய லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    6. சந்தான லட்சுமி

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    7. காருண்ய லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    8. ஆதி லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

    ×