search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
    • அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும்.

    ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும்.

    எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

    சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.

    உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

    "ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது.

    "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    • குறிப்பாக சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
    • கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும்

    கோவில்களில் ஆடிப்பூர உத்ஸவம் விசேஷமாக நடைபெறும்.

    குறிப்பாக சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆடிமாத வள்ர்பிறை துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரையில் துளசியை வழிபட்டால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகி, வாழ்க்கை வளமாகும்.

    ஆடியும் ஆறுமுகனும்

    கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும்

    கார்த்திகை விரதமும், உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில் வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.

    கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களிடம், சிவபெருமான் "கார்த்திகை விரதம் இருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி, நல் வாழ்வு அளித்து, இறுதியில் முக்தியும் கொடுப்பேன் என்று வரமளித்தார்."

    எனவே தான் ஆடி மாதக் கார்த்திகையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.

    • ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகிநீ ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான்.
    • பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகிநீ ஏகாதசி எனப்பட்டது.

    ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் குறிப்பாக மாரியம்மன் கோவில்களில் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது, தீமிதிப்பது, கூழ் வார்த்தல் போன்ற விசேஷமான வழிபாடுகள் நடைபெறுகிறது.

    ஆடிமாதத்தில் தேய்பிறை ஏகாதசி – யோகிநி ஏகாதசி.

    வளர்பிறை ஏகாதசி – சயிநி ஏகாதசி. ஆடிஅமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) ச்ரார்த்தம் செய்வது மிகவும் நல்லது.

    சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாதம்.

    ஆகையால் ஆடி அமாவாசை தர்பணத்திற்கு மிகவும் உயர்ந்தகாலம். இதனால், பித்ருக்கள் மகிழ்ந்து நமக்கு சகல செல்வத்தையும் வழங்குவார்கள்.

    குபேரனின் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பணியாளனான ஹேமமாலி என்பவன் தனது அழகான மனைவி மீது கொண்ட மையலால், வழக்கமான தனது பணியை மறந்து போனதால், குபேரனால் சபிக்கப்பட்டு குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான்.

    அப்போது ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகிநீ ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான்.

    பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகிநீ ஏகாதசி எனப்பட்டது.

    திரிவிக்ரமனாகத் தோன்றி மஹாபலியின் கர்வத்தை அடக்கிய மஹாவிஷ்ணு அவனைப் பாதாளத்துக்கு அனுப்பியவுடன் திருப்பாற்கடலுக்குச் சென்று பாம்பணையில், ஆடிமாத வளர்பிறை ஏகாதசியில்தான் சயனித்தார்.

    எனவே, இது சயநீ ஏகாதசி எனப்பட்டது.

    • ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள்.
    • பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!” என்று வேண்டுகிறது.

    ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம்.

    இது தேவர்களுக்கு இரவாகும். தை முதல் ஆனி முடிய உத்தராயணம். இது தேவர்களுக்கு பகலாகும்.

    ஆடிப் பதினெட்டு:

    ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுகிறது மனித இனம்.

    ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள்.

    பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!" என்று வேண்டுகிறது.

    மனிதகுலத்தின் அந்த வேண்டுதலின்படி, அன்னையின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடியது.

    அதற்கு நன்றி செலுத்தும் வகையில் 'ஆடிப் பதினெட்டு ' என்று கொண்டாடுகிறார்கள்.

    பதினெட்டு என்ற எண் 'ஜய' த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும்.

    மஹாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள், நதிக்கரைகளில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.

    எனவேதான், காவிரி அன்னைக்கு 'ஆடிப் பதினெட்டு'அன்று நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகின்றனர்.

    • இந்துக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகிவிடும்.
    • ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழி பட்டு வந்தனர்.

    இந்துக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகிவிடும்.

    ஆடி மாதப் பிறப்பு முதல் ,தை மாதம் மகர சங்கராந்தி வரை,பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

    ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழி பட்டு வந்தனர்.

    அம்மன் வழிபாடு, ஆடிப்பூரம், ஆடிஅமாவாசை, ஆடிக்கிருத்திகை என

    நாமும் அவர்களை போல் பெருமை வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனைத் துதித்து மகிழ்வோமாக!

    நன்றே சொல்வோம்!

    நன்றே செய்வோம்!

    • குழந்தை பாக்கியமில்லாதவர்கள் மகாமக பொங்கல் செய்து 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    • ஸ்ரீநவகன்னிகைகளுக்கு அர்ச்சனை செய்தால், சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகி நன்மைகள் உண்டாகும்.

    * ருது ஆகாத பெண்கள் 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் ருதுவாகும்.

    * திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் ஸ்ரீநவகன்னிகைகளுக்கு 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அர்ச்சனை செய்தால் திருமணம் நடைபெறும்.

    * குழந்தை பாக்கியமில்லாதவர்கள் மகாமக பொங்கல் செய்து 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    * ஸ்ரீநவகன்னிகைகளுக்கு அர்ச்சனை செய்தால், சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகி நன்மைகள் உண்டாகும்.

    * பிரதி மாதம் மகம் நட்சத்திரத்தன்று மகாமக திருக்குளத்தை ஒன்பது முறை மாலையில் வலம் வந்து, ஸ்ரீநவகன்னிகைகளுக்கு பாலாபிஷேகம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகும்.

    • கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் கணபதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
    • ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம் யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது.

    கம்போடியா

    கம்போடியாவில் விநாயகர் மூன்று கண்கள், பூணூல், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் ஆகியவற்றுடன் பிராசுஷேஸ் என்னும் பெயரில் இருக்கிறார்.

    எகிப்து

    எகிப்து நாட்டில் விநாயகர் கையில் சாவி இருக்கிறது.

    ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம் யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது.

    கிரேக்கம்

    கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் கணபதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆஸ்திரேலியா

    உலகின் பழமையான கண்டமான ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோவிலும் வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோவிலும் குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோவிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் ஆலயமும் என நான்கு விநாயகர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

    • டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    • நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

    ஜப்பான்

    சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம்.

    கான்கிட்டன் ஹாயக்ஷா என்று விநாயகருக்குப் ஜப்பானில் பெயர்கள் உள்ளன.

    டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    தாய்லாந்து

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில் கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார்.

    நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

    • கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விநாயகர் வழிபாடு சீனாவில் இருந்துள்ளது.
    • எந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது.

    சீனா

    கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விநாயகர் வழிபாடு சீனாவில் இருந்துள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியாவிற்கு குப்தர் காலத்தில் வருகை புரிந்த பாஹியான் தான் புத்தர் சிலையை சீனாவிற்குக் கொண்டு சென்றவர் என்று கூறுவார்கள்.

    எந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது.

    மலைசரிவுகளில் விநாயகர் வடிவம் காணப்படுகின்றது.

    துன்ஹவாங் குங்க்சியான் முதலிய இடங்களில் உள்ள குடவரை கோவில்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன.

    • இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார்.
    • முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.

    ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக்களைந்து பரஸ்வரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லற தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.

    இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார். பெண்ணை துரு திறன் ஆகின்றது.

    அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    நீலமேனி வாலிழை பாகத்து

    ஒருவன் இருதான் நிழற்கீழ்

    முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.

    சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.

    மாதொருபாகன் வணக்கத்துதி:

    திங்கள் தோன்றிய தேவனே உன்னோடு

    பங்காக வந்தவன் சக்தி! நவங்கள்

    எங்கெழும் படியரு உருவிளைச் காட்ட

    எங்ஙனம் தவம் செய்தோமோ ஆதிசிவனே!

    • உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன்.
    • திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.

    உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன்.

    பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில்

    மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும், முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும்

    சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும்

    தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.

    இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன.

    திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    • உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.
    • தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.

    நந்தி தேவரது அம்சமாக விளங்கும் மாணிக்க வாசகப்பெருமான் இந்த உருவத்தைக் கண்டு.

    உமையரு பாகம் ஆதாய எங்கள் பிராட்டியும்

    எம்கோனும் போற்றிசைந்த என ஆனந்தம் அடைகிறார் ஞான சம்மந்தப்பெருமான்.

    தோடுடைய செவியன் என்று அர்த்தநாரீஸ்வரையும், வேயுறு தோனியங்கள் என்று உமையோரு பாகனையும் பாடி உள்ளார்.

    ஆச்சான்புரத்து மண்ணில் திருஞான சம்மந்தருக்குக் தங்கக் கிண்ணித்தில் பால் சாதம் அளித்து ஆட்கொண்ட அருட்தன்மையை சம்மந்தர் தேவாரம் மிக அருமையாகத் தமிழ்ச்சுவையோடு காட்டுவதைப் பாருங்கள்.

    தோடுடைய செவியென் விடையேறி

    பொற்கிண்ணத்து அழகில் பொல்லாது எனத்

    தாதையர் முனிவிறத்தான் என்ன ஆண்டவன்

    தோலும் துகிலும் காட்டித்தொண்டு ஆண்பீர்.

    இறைவனைக் கண்டுபாடிய முழு முதல் தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார். திருமுறைப்பாடல்கள் யாவும் அர்த்தநாரீஸ்வரரையும், உமைபாகனையும் அழகுற வேறுபடுத்தி காட்டுவதை அறியலாம்.

    ×