என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
- சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும்.
- அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும்.
5 சபைகள்
சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன. இந்த 5 சபைகளின் சிறப்புகள் வருமாறு:
சித்சபை
சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.
வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது.
குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது.
சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.
ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600.
மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும்.
9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும். 224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும்.
64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64 ஐக் குறிக்கும்.
சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும். அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும்.
ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 பல கனிகள் (ஜன்னல்) 96 தத்துவங்களை குறிக்கும்.
விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும்.
ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும் இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர்.
இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன.
இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன.
சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார்.
ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது. நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.
- பெரிதாக அவன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. கவலையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.
- வழியில் அவனுக்கு நா வறண்டது தண்ணீரை தேடினான். சுற்றி எங்கும் தண்ணீர் கடை இல்லை.
ஒரு தேவாலயத்தைப் பராமரிக்கின்ற பொறுப்பில் இளைஞன் ஒருவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து அவன் வயோதிகப் பரவத்தையும் அடைந்து விட்டான்.
புதிதாகப் பொறுப்பேற்க அந்த தேவாலயத்துக்கு ஒரு பாதிரியார் வந்தார்.
தேவாலயத்தைப் பராமரிக்கின்றவன் எழுதப்படிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டுமென அவர் எண்ணினார். இந்த வயோதிகனுக்கோ எழுதப் படிக்கத் தெரியாது.
ஆறு மாதத்துக்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அவன் வேலையிலிருந்து விலக வேண்டும் என்று அவர் உத்தரவு போட்டார்.
அந்த வயதில் அவனால் எழுத படிக்க முடியவில்லை. எனவே ஆறு மாதத்துக்குப் பிறகு வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டான்.
பெரிதாக அவன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. கவலையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.
வழியில் அவனுக்கு நா வறண்டது தண்ணீரை தேடினான். சுற்றி எங்கும் தண்ணீர் கடை இல்லை.
இரண்டு மைல் நீளமுள்ள அந்த சாலையில் எந்தப் பகுதியிலும் தண்ணீர் கடை இல்லை.
தன்னைப் போல் எத்தனை பேர் தண்ணீர் இல்லாததால் அவதிப்பட்டிருப்பார்கள் என்று யோசித்த அவன், அந்தச் சாலையில் தண்ணீர் கடை வைக்க எண்ணி, உடனடியாக வைத்தும் விட்டான்.
வியாபாரம் பெருகி விரைவில் பெரும் பணக்காரனாகி விட்டான். கணக்கு விஷயமாக ஒருநாள் வங்கிக்கு சென்றிருந்தான். வங்கி அறிக்கை ஒன்றினைப் படித்து அவன் கையெழுத்திட வேண்டியிருந்தது.
படிக்கத் தெரியாது எனச் சொல்லி படித்துக் காட்டும்படி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.
திகைப்படைந்த அதிகாரி, "எழுதப் படிக்கத் தெரியாமலே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி இருக்கிறீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்" என்றார்.
எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளாகவே இருந்திருப்பேன் என்றான் அவன்.
- உங்கள் அனவைருக்கும் கொடுத்த பிறகும் என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது.
- அதை தர்ம காரியங்களுக்கு செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
உலகப் பெரும் கோடீஸ்வராக விளங்கியவர் ஹென்றி போர்டு. ஒருநாள் அவர் தன்னுடைய உறவினர்களை விருந்துக்கு அழைத்தார்.
விருந்தின்போது, தன்னுடைய செயலாளரை விட்டு ஒவ்வொருவரிடமும் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுக்கச் சொன்னார்.
அதில் அவர் தன்னிடமிருந்து எதிர் பார்க்கின்ற அதிகபட்சமான தொகையினை குறிக்கச் சொன்னார்.
ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசிக்காமல் அந்த தொகையை குறிப்பிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
எல்லோரும் தொகை எழுதிய பிறகு, போர்டின் செயலாளர் அந்து துண்டுக் காகிதங்களைச் சேகரித்து கொடுத்தார்.
எல்லாக் காகிதங்களையும் பரிசீலித்து அதிகபட்சத் தொகையினை யார் எழுதியிருக்கிறார்கள் எனக் குறித்துக் கொண்டார் போர்டு.
பிறகு உறவினர்களைப் பார்த்து, "உங்களில் யாரோ ஒருவர் கேட்டிருக்கின்ற அதிகபட்சத் தொகை இதுதான். அந்தத் தொகையினை உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
உங்கள் அனவைருக்கும் கொடுத்த பிறகும் என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது. அதை தர்ம காரியங்களுக்கு செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
பிறகு அவர் "போர்டு பவுண்டேஷன்" என்கிற அமைப்பினை நிறுவி அமெரிக்காவின் நகரங்களில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் நிறுவ தனது சொத்தில் கணிசமானதை நன்கொடையாக கொடுத்து விட்டார்.
- திருமணம், குழந்தைபேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்பிக்கிறார்கள்.
- இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரை சுற்றி வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
திருமலை ஸ்ரீனிவாச பெருமாளை மணம்புரிய பூமியில் அவதரித்தவள் அலர்மேல் மங்கை என அழைக்கப்படும் பத்மாவதி தாயார்.
திருமாலின் வல மார்பில் உறைந்துள்ள பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியில் உள்ள அலர்மேல் மங்காபுரத்தில் (திருச்சானூர்) தனிக்கோவில் கொண்ட எழுந்தளியுள்ளார்.
திருமலைக்கு செல்பவர்கள் முதலில் தாயாரை வணங்கி அனுமதி பெற்றே ஏழுமலையானை தரிசனம் செய்ய மலையேற வேண்டும் என்பது ஐதீகம்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படுவது போல் இங்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும் தாயாருக்கு தினமும் விதவிதமான பிரசாதங்கள் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
அதில் தயிர் சாதம் முக்கியமாக இடம் பெறுகிறது.
தாயாருக்கு அதிகாலையில் நடக்கும் முதல் நைவேத்தியத்தில் தயிர்சாதம், புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் படைக்கப்படும். "மாத்ரா" என்றழைக்கப்படும் தாளிக்காத தயிரில் வெண்ணை கலந்த சாதம் இடம் பெறும்.
மேலும் லட்டு, வடை, கேசரி ஆகியவையும் படைக்கப்படுகிறது.
2-வது நைவேத்யம் காலை 9 மணிக்கு நடக்கிறது. அப்போது புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
3-வது நைவேத்யம் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
அப்போது தயிர் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், மிளகு பொங்கல் ஆகியவை படைக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தோறும் தயாருக்கு நடக்கும் திருமஞ்சனத்தின் போது வெண் பொங்கலும், பின்னர் நடக்கும் லட்சுமி பூஜையின் போது கேசரியும் நைவேத்யம் செய்யப்படுகிறது.
கல்யாண உற்சவத்தின் போது சர்க்கரை, பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், அப்பம், காய்கறிகளால் தாயாரிக்கப்படும் கதம்ப சாதம், பாயாசம் படைக்கப் படுகிறது.
மதியம் நடக்கும் அபிஷேகத்தின் போது கார புளியோதரையும், வியாழக்கிழமை நடக்கும் திருப்பாவாடை சேவையின்போது லட்டு, வடை, சிலேபி, முறுக்கு, தோசை, அப்பம் ஆகியவையும் படைத்து வழிபாடு நடக்கிறது.
தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாத பூஜையின் போது தாயாருக்கு வெண்பொங்கல், வெல்ல தோசை, சுசியம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
பிரமோற்சவ நாட்களில் வாகன சேவையின் போது தாயாருக்கு தோசை நைவேத்யம் கொடுக்கப்படுகிறது.
முக்கிய பண்டிகை நாட்களில் சித்தராண்ணம் பால் கோவா, வடை பருப்பு, சுண்டல், பானகம்,, மைசூர்பாகு, பாதுஷா ஆகியவை படைக்கப்படுகிறது.
தாயாருக்கு வெள்ளிக்கிழமை பூஜை விசேஷம். குறிப்பாக தை வெள்ளிக்கிழமை அதிவிசேஷமாக கருதப்படுகிறது.
திருமணம், குழந்தைபேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்பிக்கிறார்கள்.
இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரை சுற்றி வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
சரடு சமர்பிக்கும் பெண்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
- ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.
வில்வம் - கண்டம்
தாமரை - முகம்
எருக்கம்பூ - திருமுடி
நத்தியாவட்டை - மார்பு
பாதிரிப்பூ - உந்தி
அலரிப்பூ - அரைப்பகுதி
செண்பகம் - முழந்தாள்
நீலம் - பாதம்
வில்வம் எடுக்கக் கூடாத நாட்கள்
மாதப்பிறப்பு, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கலாகாது.
பஞ்ச வில்வம்
நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.
- அலரிப்பூ - சத்தியம்
- செந்தாமரை - அறிவு
புன்னை - கொல்லாமை
வெள்ளெருக்கு - அடக்கம்
செண்பகம் - பொறுமை
நந்தியாவட்டை - அன்பு
நீலோற்பவம் - தியானம்
பாதிரிப்பூ - தவம்
அலரிப்பூ - சத்தியம்
செந்தாமரை - அறிவு
ஆகியவை எட்டு குணங்களைக் குறிக்கும் மலர்களாகும்.
- பாதிரிப்பூ - நல்ல மனைவி கிடைப்பாள்
- பலாச மலர் - நிறைய பேரின் அன்பு கிடைக்கும்
பூஜைக்கு உதவாத மலர்கள்
எடுத்தபின் மலர்ந்த பூ, பழம் பூ, எருக்கம் இலையிலும், ஆமணக்கும் இலையிலும் கட்டி வைத்த பூ, கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், கீழே உதிர்ந்த பூக்கள், இடுப்புகளின் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட பூக்கள், புழுக்கடித்த பூக்கள், சிலந்தி பறவைகளின் எச்சம் பட்ட பூக்கள், தலை முடி பட்ட பூக்கள், இரவில் எடுத்த பூக்கள், நீரில் மூழ்கிய பூக்கள், அசுத்தமானவரால் எடுக்கப்பட்ட பூக்கள் போன்ற பூக்கள் ஒரு போதும் பூஜைக்கு ஆகாதவை.
அம்பிகைக்கு உகந்த மலர்கள்
பாதிரிப்பூ - நல்ல மனைவி கிடைப்பாள்
பலாச மலர் - நிறைய பேரின் அன்பு கிடைக்கும்
தாழம்பூ - உயர் பதவி முதலிய பெருமைகளை அடைவர்
மாதுளை - எல்லோடைய கருணையையும் பெறுவர்
தாமரைப்பூ - பகை நீங்கப் பெறுவார்கள்.
- பலாசம் பூ - களவுபோன பொருள் கிடைக்கும்
- எள்ளுப்பூ - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
சிவன் - தாழம்பூ
பிரமன் - தும்பை
துர்க்கை - அருகம்புல்
சூரியன் - வில்வம்
விநாயகர் - துளசி
திருமால் - நந்தியாவர்த்தம்
உமை - நெல்லி
பாவம் அகற்றும் மலர்கள்
பலாசம் பூ - களவுபோன பொருள் கிடைக்கும்
எள்ளுப்பூ - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
கொன்றைப்பூ - அறியாமல் செய்த கொலை
வெள்ளைப் பூ - பிறர் மனைவிக்கு இழைத்த குற்றம்
கத்தரிப் பூ - நோய் நீங்கும்.
நீலோற்பவம் - கொடிய வார்த்தையால் வரும் துன்பம் நீங்கும்.
தும்பைப் பூ - பசு வதை செய்த பாவம் விலகும்.
- காளியம்மன் - எலுமிச்சை பழம் மாலை
- நாகாத்தம்மன் - மல்லிகை மலர்
சிவபெருமான் - வில்வம், கொன்றை
விநாயகர் - அருகு, திருவாத்தி
முருகன் - கடம்பு
திருமால் - முல்லைப்பூ
சரஸ்வதி - வெண்தாமரை
உக்கிரமூர்த்திகள் - சிவப்பு மலர்கள்
எல்லாத் தேவருக்கும் - கருங்குவளை
சூரியன் - தாமரைப்பூ
சோமன் - வெள்ளைப்பூ
புதன் - பொன்னரளி
பிரகஸ்பதி - மஞ்சள் பூ
வெள்ளி - வெள்ளைப்பூ
செவ்வாய் - சிவப்புப் பூ
சனி - நீலம்
ராகு - புகை
கேது - சிவப்பு
மாரியம்மன் - மல்லிகைப்பூ
காளியம்மன் - எலுமிச்சை பழம் மாலை
நாகாத்தம்மன் - மல்லிகை மலர்
சீலக்காரி - கருகமணி மாலை
கருப்ப சாமி - பட்டுத் துணி
ஆஞ்சநேயர் - வடை மாலை
கங்காதேவி - மா இலை.
- தாமரைப்பூ- 7 நாட்கள் வரை
- துளசி- 12 மாதங்கள்.
தாமரைப்பூ- 7 நாட்கள் வரை
அரளிப் பூ- 3 நாட்கள் வரை
வில்வத்தை - 6 மாதங்கள் வரை
துளசி- 12 மாதங்கள்.
12 மாதங்களுக்கு உரிய சிறப்பு மலர்கள்
சித்திரை - பலாசம்
வைகாசி - புன்னை
ஆனி - வெள்ளெருக்கு
ஆடி - அரளி
ஆவணி - செண்பகம்
புரட்டாசி - கொன்றை
ஐப்பசி - தும்பை
கார்த்திகை - கத்தரி
மார்கழி - பட்டி
தை - தாமரை
மாசி - நீலோற்பவம்
பங்குனி - மல்லிகை
சிவ பூஜைக்குரிய மலர்கள் நான்கு வகைப்படும். அவை
1. கோட்டுப்பூ, 2. கொடிப்பூ, 3. நீர்ப்பூ, 4. நிலப்பூ.
ஒவ்வொரு வகையிலும் இடம் பெற்றுள்ள பூக்கள் வருமாறு:
1. கோட்டுப் பூ
வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலிங்கை, நொச்சி, பன்னீர், அகில், மாதுளை, அசோகு, பாதிரி, வெள்ளெருக்கு, இலந்தை, பலாசு, நுணா, நறவம், புன்னை, விளா, மருது, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, குருந்து, வில்வம், நாவல் இவைகள் கோட்டுப்பூ எனப்படும்.
2. கொடிப்பூ
நாட்டு மல்லிகை, முல்லை, மௌவல், வெற்றிலை, தாளி, கருங்காக்கொன்றை, வெண்காக்கொன்றை, குருக்கத்தி, இருவாட்சி (ஜாதிமல்லி), கொகுடி, பிச்சி இவை கொடிப்பூக்கள் எனப்படும்.
3. நீர்ப்பூ
செந்தாமரை, அதிக இதழில்லாத தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் போன்றவை நீர்ப்பூ என்றழைக்கப்படுகிறது.
4. நிலப்பூ
பட்டி, நாயுருவி, கண்ணுப்பூ, பச்சை, சிவந்திப்பூ, தும்பை, வெட்டிவேர், மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, துளசி, செங்கீரை, கருஊமத்தை, செம்பரத்தை கொக்கிறகு, அனிச்சம், நந்தியாவட்டை இவை நிலப்பூ வகைகளாகும்.
- அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
- அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப் பிடிக்கப்படுகின்றன.
* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
* கிழக்கு முகமாக அமருங்கள்.
* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.
மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது 'இயற்கை வைத்தியம்' என்ற புத்தகத்தில் 'ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல.
அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர்கள் 'ராம' நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.
மேலும் 'ராம' நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார்.
இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'ரா' என்பது 'ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், 'ம' என்பது 'ஓம் நம சிவாய' என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.
கந்தர் சஷ்டி கவசத்தில் கூட 'ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி' என சொல்லப்படுகின்றது.
'ரா' என்ற எழுத்தும் 'ம' என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது.
ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்