search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் நகல் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
    X

    மழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் நகல் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்

    • செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
    • அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குன்றத்தூர் வட்டத்தில் மிச்சாங், புயலின் தாக்கத்தால் மிக அதிக கனமழை பொழிந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல் சான்றிதழ்களை பெறுவதற்காக விண்ணப்பிக்க இன்று(11-ந்தேதி) முதல் முதல் 10.01.2024 வரை காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    முகாம்கள் குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மாங்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொளப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வரதராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே மிச்சாங் புயலினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சான்றிதழ்கள் மற்றும் அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×