search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலை அய்யங்குளத்தில் விழா தெப்பல்: உற்சவத்தில் பராசக்தி அம்மன் பவனி
    X
    திருவண்ணாமலை அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவத்தில் பவனி வந்த காட்சி.

    திருவண்ணாமலை அய்யங்குளத்தில் விழா தெப்பல்: உற்சவத்தில் பராசக்தி அம்மன் பவனி

    • ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.

    திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் நிறை வாக நடைபெறும் தெப் பல் உற்சவத்தின் 2ம் நாளான நேற்று அய்யங்கு ளத்தில் பராசக்தி அம் மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அதன் படி, தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்தார்.

    அதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் பவனி வந்து பத்தர்களுக்கு அருள்பாலித் தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, இரவு 8 மணி அளவில், அண்ணாமலையார் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

    தெப்பத்தை முன்னிட்டு, அய்யங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.

    Next Story
    ×