search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை ஈடன் கடற்கரையில் 3 நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா
    X

    புதுவை ஈடன் கடற்கரையில் 3 நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா

    • 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது.
    • 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள அழகிய கடற்கரையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையும் ஒன்று.

    இந்த கடற்கரையில் வரும் 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது. இந்த 3 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை வரை காற்றாடி திருவிழா நடக்கிறது.

    இதற்கான முன்பதிவு பட்டத்திருவிழா இணையதளத்தில் ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    குறைந்தபட்சம் 6 அடி முதல் 19 அடி வரையிலான 120 ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளது. புதுவையில் பிரம்மாண்டமாக சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து காற்றாடி திருவிழா முதல்முறையாக நடத்தப்படுகிறது.

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. 12 வயதுக்கு மேற்பட்ட காற்றாடி விரும்பிகள் ரூ.100 செலுத்தி பங்கேற்க வேண்டும்.

    Next Story
    ×