என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை?- போலீசார் விசாரணை
- வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர்.
- வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 70). ஓய்வு பெற்ற மருந்தாளுனர். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இவர்களுக்கு சுகந்த் (40) என்ற மகனும், இஷான் (8) என்கிற பேரனும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், வீட்டிலிருந்து புகை வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து, நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து வீட்டிற்குள் போலீசார் சென்றனர். அப்போது, வீட்டினர் வெளியில் ரத்த கரைகள் படிந்திருந்தது.
வீட்டிற்குள் இருந்து கமலேஸ்வரி, சுகந்த், நிஷான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கருகி இறந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இறந்து கிடந்த 3 பேரின் உடலை மீட்பதற்கு நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்