search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சூலூர் அருகே ஜெயிலுக்கு அனுப்பிய கள்ளக்காதலியை வீடு புகுந்து வெட்டிய வாலிபர்
    X

    சூலூர் அருகே ஜெயிலுக்கு அனுப்பிய கள்ளக்காதலியை வீடு புகுந்து வெட்டிய வாலிபர்

    • கடந்த மாதம் 21-ந் தேதி சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் வருவதற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    கோவை,

    கேரள மாநிலம் மூணாறை சேர்ந்தவர் வீரசிங். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 39). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து அவர் தனது மகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமான உறவினரான சுரேஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும்அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதனையடுத்து பாண்டியம்மாள் கேரளாவில் இருந்து புறப்பட்டு தனது மகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார்.

    இதனை தெரிந்து கொண்ட சுரேஷ்குமார் பாண்டியம்மாளை தேடி திருப்பூருக்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 4-ந் தேதி பாண்டியம்மாளின் வீட்டிற்கு தகராறு செய்தார். இது குறித்து அவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதன் பின்னர் பாண்டியம்மாள் திருப்பூரில் இருந்த கருமத்தம்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். கடந்த மாதம் 21-ந் தேதி சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பாண்டியம்மாளை தேடி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த பாண்டியம்மாளை தன்னை ஏன் போலீசில் சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பினாய் என கூறி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து தலை , கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாண்டியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×