என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கேரளாவில் தொழிலாளியை கம்பியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் கைது-தென்காசி பஸ் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்
- கோபமடைந்த நாக அர்ஜுன் இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
- நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாரதி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் நாக அர்ஜுன் (வயது 22).
ஒரே அறையில்
இவரும், திருவனந்தபுரம் தெக்குபாரா ஆனந்த பவன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(47) என்பவரும் கறி வெட்டும் கடையில் ஒன்றாக வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே அறையில் தங்கியிருக்கும் இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக மது அருந்தியபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
தென்காசி
இதனால் கோபமடைந்த நாக அர்ஜுன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராதாகிருஷ்ணன் மயங்கி விழுந்ததால், நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த கூத்தாட்டுகுளம் போலீசார் தென்காசி மற்றும் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி தென்காசி பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித்திரிந்த நாக அர்ஜுனை கைது செய்து கூத்தாட்டு குளம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்