search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    லாரிகளில் கொண்டு செல்லும் ஜல்லிகற்கள்  சாலையில் சிதறி கிடப்பதால் விபத்து
    X

    லாரிகளில் கொண்டு செல்லும் ஜல்லிகற்கள் சாலையில் சிதறி கிடப்பதால் விபத்து

    • லாரிகளில் அளவுக்கு அதிகமான கலவைகள் கொண்டு செல்வதால் சாலைகளில் வழிந்தவாறு ஜல்லி கற்கள் சிதறி விழுகிறது.
    • வாகனங்கள் ஜல்லி மீது ஏறுவதால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு தொழில்சாலைகள், வீடுகள், மற்றும் அரசு பணிகளுக்கும் அதிக அளவில் சிமெண்ட் ஐல்லி கலவை லாரிகள் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, ஓசூர்-பேரிகை சாலை மற்றும் சூளகிரி- உத்தனப்பள்ளி சாலை என பல்வேறு சாலைகளில் செல்கிறது.

    லாரிகளில் அளவுக்கு அதிகமான கலவைகள் கொண்டு செல்வதால் சாலைகளில் வழிந்தவாறு ஜல்லி கற்கள் சிதறி விழுகிறது. இதனால் வாகனங்கள் ஜல்லி மீது ஏறுவதால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது.

    ஜல்லி கலவைகள் ஏற்றி செல்லும் லாரிகள் சாலையில் ஜல்லி கற்கள் சிதராதவாறு தார்பாய்களை மூடி கொண்டு செல்ல வேண்டும். இதனை மீறினால் அந்த வாகனங்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    Next Story
    ×