search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கவுன்சிலர்களின் கருத்தை அதிகாரிகள் கேட்பதில்லை- அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    X

    கவுன்சிலர்களின் கருத்தை அதிகாரிகள் கேட்பதில்லை- அ.தி.மு.க. குற்றச்சாட்டு

    • கவுன்சிலர்கள் சொல்வதை மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதில்லை.
    • அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை வேண்டுமென்றே மூடுகிறார்கள்.

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார் கூறியதாவது:-

    கவுன்சிலர்கள் சொல்வதை மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதில்லை. மக்கள் பிரச்சினை குறித்து அவர்களிடம் தெரிவிக்கும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை வேண்டுமென்றே மூடுகிறார்கள். அம்மா உணவகம், அம்மா கிளினிக் போன்றவற்றை படிப்படியாக மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள் பங்கேற்கவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடப்பதால் மக்கள் பிரச்சினை பேச வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×