search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார் தேடுதல் வேட்டை
    X

    தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார் தேடுதல் வேட்டை

    • வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியை சுற்றிலும் ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. அதேபோல் நீலகிரி மாவட்ட வனப்பகுதி மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெ க்டர் ராம் பிரபு தலைமையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கர்நாடகா மற்றும் நீலகிரி எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார், சிறப்பு இலக்கு படை போலீசார் (எஸ்.டி.எப்), வனத்துறையினருடன் இணைந்து எத்திகட்டி மலை, கல்வீரன் கோவில் மற்றும் கொங்கள்ளி வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம், சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் முக்கியமாக கேரளா வயநாடு நிலச்சரிவு காரணமாக, அங்கு காட்டுக்குள் நடமாடிக்கொண்டு இருந்த மாவோயிஸ்ட்கள் தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் முகாமிடாதபடி மாவோயிஸ்ட் தடுப்பு காவலர்கள், சிறப்பு இலக்கு படை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து பர்கூர், கடம்பூர், பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி ஆகிய மலை எல்லையோர கிராமங்களிலும் வனப்பகுதியில் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கர்நாடக மற்றும் நீலகிரி எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    மேலும் மலைகிராம மக்களிடம் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்தும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×