search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரி கடலில் போலீசார் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
    X

    புதுச்சேரி கடலில் போலீசார் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

    • ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது.
    • கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது.

    புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடி படகில் தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    புதுச்சேரி மீனவ கிராமங்களான காலாப்பட்டு, புதுக்குப்பம் வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 கிராமங்களில் சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×