search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும்-அரியலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
    X

    விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும்-அரியலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

    • விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    அரியலூர்.

    விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் குழு சார்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    மேலும் விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது, உர விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட பின், இது தொடர்பாக அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரியலூர் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் திருமானூர் வட்டாரத்தில் உள்ள 3 தனியார் உரக்கடைகளுக்கு, ஒவ்வொரு கடைக்கும் அபராதம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    தற்போது தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 2 தனியார் உரக்கடைகள் மீது ஜெயங்கொண்டம், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் அபராதமாக ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதில் 5 உரக்கடைகளுக்கு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. செந்துறை குற்றவியல் கோர்ட்டில் மேலும் 1 தனியார் உரக்கடை மீது வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×