search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே கார்-லாரி பயங்கர மோதல்: போக்குவரத்து பாதிப்பு
    X

    திருப்பூர் அருகே கார்-லாரி பயங்கர மோதல்: போக்குவரத்து பாதிப்பு

    • லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
    • லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    திருப்பூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் திருச்செங்கோட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி இன்று அதிகாலை தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    கேரளாவை சேர்ந்த அஜய் என்பவர் மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி லாரியில் வந்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் திருச்சி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் லாரியின் பின் சக்கரம் முழுவதுமாக கழன்று ஓடியதால் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் லாரி டிரைவர் பலத்த காயங்களுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருச்சி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பொங்கலூர் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×