என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.
- அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார்.
தென்காசி:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ராகுல்காந்திக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் எம்.பி.யாக ராகுல்காந்தி பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். இதை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். வட்டார பொறுப்பாளர் மகாராஜா, செல்லப்பா, ஜெயபால், ஞானசெல்வன், சாலமோன்டேவிட், யேசுவடியான், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் தங்கரத்தினம் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
மாநில இலக்கிய அணி தலைவர் ஆலடி சங்கரய்யா, மாவட்ட துணைத்தலைவர் ச.செல்வன், மாநில இலக்கிய அணி செயலாளர் பொன் கணேசன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, வடக்கு வட்டார பொறுப்பாளர் தாயார்தோப்பு ராமர், ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி.வைகுண்டராஜா, கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் ராதா குமாரி, மாரிமுத்து, வட்டார செயலாளர் மாரியப்பன், சொல்லின்செல்வன், ரத்தினவேல்சாமி, சிவகுமார், ரத்தினசாமி, வேல்பாண்டி, மாரிச்செல்வம், சீவலப்பேரியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்