search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உட்கட்சி பிரச்சனையில் வெட்டிக்கொலை
    X

    அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உட்கட்சி பிரச்சனையில் வெட்டிக்கொலை

    • பலியான புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (வயது 45). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நகராட்சி முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் புஷ்பநாதன் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், புஷ்பநாதனை வழிமறித்தனா்.

    இதனால் பதறிய அவர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட முயன்றார். அதற்குள் மா்மநபர்கள் அவரை மடக்கி அாிவாளால் நடுரோட்டில் வைத்து வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    பின்னர் மர்மநபர்கள், தாங்கள் வந்தமோட்டாா் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு புஷ்பநாதன் விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கிருந்தவர்களிடம் போலீசாா் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து பலியான புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க. நிா்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே ஒன்று திரண்டனர்.

    பின்னர் அவர்கள், புஷ்பநாதனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உள்கட்சி பிரச்சனையில் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலை செய்யப்பட்ட புஷ்பநாதனுக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டரா? அல்லது புஷ்பநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாார்கள்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படையும், இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் காரணமாக வண்டிப்பாளையம் மற்றும் கடலூர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

    Next Story
    ×