search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது அவதூறு வழக்கு- செல்வபெருந்தகை
    X

    பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது அவதூறு வழக்கு- செல்வபெருந்தகை

    • ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
    • சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பா.ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 21 பேர் கைது செய்யப் பட்டனர்.

    இவர்களில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அஸ்வத்தாமனும் ஒருவர். இந்த நிலையில் இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை தொடர்புபடுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொது செயலாளர் ஜெய்சங்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக நட வடிக்கை கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    இதுபற்றி செல்வ பெருந்தகையிடம் கேட்டபோது, சட்டம் தன் கடமையை செய்யும். யாரையோ திருப்திபடுத்துவதற்காக, எதையோ திசை திருப்புவதற்காக அவதூறு பரப்பி உள்ளார்கள். சட்டப் படி அவதூறு வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    Next Story
    ×