search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்வு
    X

    தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்வு

    • வைகாசி முகூர்த்தத்தையொட்டி ஏராளமானோர் நகைகள் வாங்கி வருகிறார்கள்.
    • தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 480 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

    நேற்று கிராம் ரு4,775 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று 4,835 ஆக உயர்ந்து உள்ளது. பவுன் நேற்று ரூ.38,200 ஆக இருந்தது. இன்று ரூ.38,680 ஆக அதிகரித்து உள்ளது.

    தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராம் ரூ.60-ம், பவுன் ரூ. 480-ம் உயர்ந்து விட்டது.

    இதே போல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்து உள்ளது. கிராம் ரூ.67-ல் இருந்து ரூ.67.50-ஆகவும் கிலோ ரூ.67 ஆயிரத்தில் இருந்து 67,500-ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

    தற்போது வைகாசி முகூர்த்தத்தையொட்டி ஏராளமானோர் நகைகள் வாங்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    Next Story
    ×