search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானகரம்-மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    வானகரம்-மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல்

    • சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், வானகரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
    • வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று கொண்டிருந்தன. சாலையின் இரு புறங்களிலும் இந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக இன்று காலையிலேயே அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுக்குழு நடைபெறும் இடத்துக்கு வரத்தொடங்கினார்கள். காலை முதலே கார்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அ.தி.மு.க. வினர் கட்சி கொடியுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கூட்டம் நடை பெறும் இடத்துக்கு வந்தனர்.

    இதனால் கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் ஆகிய இடங்களில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல வாகன நெரிசல் அதிகரித்துக்கொண்டே சென்றது.

    சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், வானகரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று கொண்டிருந்தன. சாலையின் இரு புறங்களிலும் இந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். வேலைக்கு சென்றவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    இந்த போக்குவரத்து நெரிசலில் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கியது. உடனே போலீசார் களத்தில் இறங்கி அந்த ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக புழல்-தாம்பரம் வெளிவட்ட சாலையில் இருந்து கனரக வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×