search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாலிபரை அடித்துக் கொன்ற எலக்ட்ரீசியன் ஏரியில் விழுந்து பலி
    X

    வாலிபரை அடித்துக் கொன்ற எலக்ட்ரீசியன் ஏரியில் விழுந்து பலி

    • கொலை தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • பிரபாகருக்கும், பெருமாளுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் தகராறும் ஏற்பட்டு வந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நாராயண பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பிரபாகர் பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிரபாகர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பிரபாகரை வேலைக்கு அழைத்து சென்ற பெருமாள் என்பவர் அங்குள்ள ஏரியில் விழுந்து இறந்து பிணமாக மிதந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் பெருமாள் வசித்து வந்தார். இவர் பிரபாகரை எலக்ட்ரீசியன் வேலைக்கு அழைத்துச் சென்றார்.

    பிரபாகருக்கும், பெருமாளுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் தகராறும் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் எலக்ட்ரீசியன் பணிக்குச் சென்ற இருவரும் மதுபானம் அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளனர்.

    பொன்னேரி ஏரிக்கரை மேம்பாலத்தின் கீழே அவர்கள் தகராறில் ஈடுபட்டபோது இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக கடுமையாக தாக்கிக் கொண்டு உள்ளனர்.

    இதில் பிரபாகர் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்தார். அடிதடியில் மயங்கி ஏரியில் விழுந்து பெருமாள் நீரில் மூழ்கி இறந்து போய் உள்ளார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பெருமாள் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றினார்கள். கொடுக்கல் வாங்கல் தகராறில் மதுபோதையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரிழந்து உள்ளது தெரியவந்தது.

    Next Story
    ×