என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை- அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
- அணையில் இருந்து பாசனத்திற்காக 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- பெரியகுளம் 28, வீரபாண்டி 1.8, அரண்மனைபுதூர் 7.2, ஆண்டிபட்டி 2.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.
குறிப்பாக ஆண்டிபட்டி, பெரியகுளம், வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட அணைகளுக்கும் மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது. நேற்று 96 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை 201 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. 68 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.11 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 16.4, தேக்கடி 4.4, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 2.2, போடி 7.6, வைகை அணை 63.2, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 21, பெரியகுளம் 28, வீரபாண்டி 1.8, அரண்மனைபுதூர் 7.2, ஆண்டிபட்டி 2.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்