search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திரதின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
    X

    சுதந்திரதின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

    • தலைமை செயலக பகுதி சிவப்பு மண்டல பகுதியாக அறிவிப்பு.
    • டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் பறப்பதற்கு தடை.

    சென்னை:

    சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமை செயலக பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரையும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கவும் போலீசார் முடிவு செய் துள்ளனர்.

    சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜூகள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி வரு கிறார்கள். இந்த சோத னையை இன்று இரவில் இருந்து வருகிற 15-ந் தேதி வரையில் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

    சென்னை மாநகரில் அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேக நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடலோர காவல் குழும போலீசார் ரோந்து பணி களை தீவிரப்படுத்தி உள்ள னர். சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Next Story
    ×