search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பஸ்களை மாற்றும் பணி தீவிரம்-அமைச்சர் சிவசங்கர் தகவல்
    X

    பழைய பஸ்களை மாற்றும் பணி தீவிரம்-அமைச்சர் சிவசங்கர் தகவல்

    • படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்க அரசு முன்வருமா?
    • புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை.

    சென்னை:

    சட்ட சபையில் கேள்வி நேரத்தில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் காரைக்குடியில் இருந்து கூடுதலாக படுக்கை வசதி கொண்ட பேருந்து இயக்க அவசியம் இல்லை என பதிலளித்தார்.

    மேலும், பழைய பேருந்து களை மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்காத காரணத்தால் பழைய பேருந்துகளை மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்தப்பின் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் பதில் அளித்தார்.

    Next Story
    ×