search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,
    • காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவ ட்ட பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்ஜி வரவேற்றார். வட்ட பொருளாளர் முத்துசாமி நிதிநிலை அறிக்கை வாசி த்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் மகாலி ங்கம், மாவட்டத் துணைத் தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பணிகளை தோற்றுவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், தமிழக அரசு துறையில் பணிபுரியும் வெளி ஒப்பந்ததாரர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் சமூக நல துறையின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்ட துணை த்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்டத் துணைத் தலைவர்கள் வீரபுத்திரன், செந்தில்முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் சாமிதுரை, விஜயராணி, சாலை பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசு

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர மும்முனை சந்திப்பில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மீரான் ஷா தலைமை தாங்கினார். கிராத் மன்சூர் அஹமத் ஹஜரத் ஓதினார். மாநில நிர்வாகி நவாப் ஜான் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பீர் முகமது முன்னிலை வகித்தார்.

    மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்டத் தலைவர் முகமது ரபிக், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் தலித் சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாபீர் உசேன் நன்றி கூறினார்.

    • கிரைம் போலீஸ் ஆனந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • இவர் கடலூர் மத்திய சிறையில் இருந்தபோது, திருட ஜெயிலில் திட்டம் போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், கிரைம் போலீஸ் ஆனந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்ட ஒரு நபர் பயந்தபடி வேகமாக நடந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நைனார்பாளையத்தை சேர்ந்த சின்னையன் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் கடலூர் மத்திய சிறையில் இருந்தபோது, சின்னசேலம் அடுத்த பூண்டியை சேர்ந்த சின்னதுரை (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் திருட ஜெயிலில் திட்டம் போடப்பட்டது.

    இருவரும் ஜாமீனில் வெளிவந்த பிறகு பூண்டியில் உள்ள நல்லம்மாள் (65) என்பவரது வீட்டில் திருடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சின்னையனை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி பூண்டி கிராமத்திற்கு சென்ற சின்னதுரையை கைது செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நல்லம்மாள் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் 5 பவுன் நகையும், ரூ.1 லட்சம் திருடு போனதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அங்கிருந்து ஒரு பவுன் நகையும், ரூ.21 ஆயிரம் பணமும் திருடியதாக சின்னையனும், சின்னதுரையும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து சின்னசேலம் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.இந்த வளா கத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் வாதிகள் பிரதிவாதிகள் மற்றும்நீதிமன்ற பணியாளர்கள் தங்களின் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்த வசதி மற்றும் வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் நடும் விழா இன்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரணிம்மா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்ட பாணி கலந்துகொண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன நிறுத்த வசதிகளை திறந்து வைத்து . கார் நிறுத்துவதற்கானமுதல் டோக்கனை விழுப்புரம் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயன் தரும் மரக்கன்றுகளையும் மூலிகை செடிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தண்டபாணி,சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் நட்டனர்.

    விழாவில் விழுப்புரம் மாவட்ட கிழமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி,விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழுப்புரம் எஸ்.பி.சசாங் சாய், அரசு வக்கீல்கள் நாகராஜன் எம். எஸ். நட ராஜன்விழுப்புரத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தயானந்தம், காளிதாஸ்,சண்முகம்,பத்மநாபன்,மூத்த வழக்கறிஞர்கள் இள ங்கோவன், ராஜாராமன், ராதாகிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற அலுவலக அலுவலர்கள்,தலைமை எழுத்துகள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார்.
    • பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). இவர் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து இளையாங்கன்னி செல்ல வேறு ஒரு பஸ்சில் ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்கினார்.
    • கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டை வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது31) என்பவர் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டிற்க்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்குவது போல் பொருட்களின் விலையை கேட்டு, சில வகை பொருட்களை எடுத்து வைக்கக் கூறியுள்ளார். பின்பு கடை உரிமையாளர் மங்கையர்க்கரசி அந்த நபர் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துள்ளார்.

    பிறகு அந்த நபர் 1400 ரூபாய் விலையில் ஒரு அரிசி சிப்பத்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளர் மங்கை யர்க்கரசியிடமே ரூ. 2000 பணம் கேட்டுள்ளார். மங்கையர்க்கரசி 2000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளார். இதன் பிறகு அந்த நபர் ஒரு சிப்பம் அரிசி ரூ. 2000 பணம் ஆகியவற்றுடன் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது கடையின் உரிமையாளர் மங்கையர்க்கரசி தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என கூறியிருக்கிறார்.

    வெகுநேரம் கழித்து மங்கை யர்க்கரசிக்கு சுயநினைவு வந்ததாகவும் அதன் பிறகே கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார். இதன்பிறகு மங்கையர்க்கரசி அருகில் உள்ள கீழ்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வந்து போன சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது, 

    புதுமைப் பெண் திட்டம் மாவட்ட சமூக நலத்துறை மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 6- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியான முதலாம் ஆண்டு மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார். மேலும் அந்தந்த கல்வி நிறுவன வளாகங்களில் புதுமைப்பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்க்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.
    • மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராஜேஷ் (வயது 7) இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி, ஞானவேல் மற்றும் மயக்கமருந்து மருத்துவர்கள் மகேந்திரவர்மன், தினேஷ், சிலம்பரசன், முத்துக்குமார், சாந்தி, சரண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் அவரது மூக்கில் சிறிய அளவிலான 3 பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூக்கில் இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

    தொடர்ந்து இதே மருத்துவ குழுவினர் எலவனாசூர் கோட்டை கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (27) பொறியியல் படித்துள்ளார். இவருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் தலைவலி கண் பார்வைத் திறன் குறைபாடு இருந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் இளையராஜா (29), சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜிந்தா குமார் மகன் ஹரிதாஸ் (11) மற்றும் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் (35) ஆகியோருக்கு குறட்டை வியாதி இருந்துள்ளது. இதையொட்டி இவர்கள் 3- பேரும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எண்டோஸ்கோபி, பூஞ்சை நோய், குறட்டை வியாதி ஆகியவற்றிற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறட்டை வியாதிக்கு 8 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் அதிக பிரசவம் நமது கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது என கூறினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, துணை முதல்வர் ஷமீம், நிலைய மருத்துவர் அனுபமா, உதவி நிலைய மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
    • 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகேயுள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் இளையராஜா, அசோக், கல்வி, மணிகண்டன், சக்தி, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இளையராஜா, அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கு புகைப்பட்டி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவானாசூர்கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எறையூரில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் காட்டு கோவில் அருகே போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் எறையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லியோ பிரகாஷ் (வயது 26) என்பதும் அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த ஜோசப்(40) ர் தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×