search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
    X

    வடசேரியில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

    • குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில் :

    பார்வதிபுரம் கணியாகுளம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 43) கொத்தனார்.

    இவரது மனைவி ஆஷா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரியப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து மாரியப்பன் வெளியே சென்றார்.

    இந்தநிலையில் பார்வதிபுரம் இலந்தையடி ரெயில்வே கேட் பகுதியில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக மனைவி ஆஷாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு சென்று மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடசேரி போலீசில், ஆஷா புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×