search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓசூர் அருகே கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. திடீர் சாலை மறியல்: வாக்குவாதம்
    X

    ஓசூர் அருகே கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. திடீர் சாலை மறியல்: வாக்குவாதம்

    • அ.தி.மு.க. - தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம்.
    • கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த வேப்பனஅள்ளி பகுதியில் உள்ள கும்பாளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ராமன் தொட்டி கிராமம் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தில் இருந்து சின்னாறு தொட்டி வரை தார் சாலை அமைக்க வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ஒன்றிய அரசு ரூ.5 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்க தி.மு.க. நிர்வாகியும், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமையில், கும்பாளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் பூமி பூஜை தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து இந்த தார் சாலை பணிக்கு தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறி தனியாக பூமிபூஜை போடுவதற்காக வந்ததாக தெரிகிறது.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ் மற்றும் தி.மு.க.வினர் இந்த பகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். எனவே எம்.எல்.ஏ. மீண்டும் பூஜை போடக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பேரிகை-தீர்த்தம் சாலையில் திடீரென்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    அப்போது அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷய் அணில் மற்றும் பேரிகை போலீசார் இருதரப்பினர் இடையே சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×