என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவோம்
- ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவோம் என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத் தலைவர் கூறினார்.
- தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவோம்.
மதுரை
தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந் தனர்.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு எந்த வித தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத்தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் கூறியதாவது:-
பீட்டா போன்ற சில அமைப்புகள் தமிழர்களின் உணர்வுக்கு எதிராக தமிழரின் கலாசாரத்திற்கு எதிராக, நமது ஜல்லிக்கட்டு போட்டியை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வந்தன.
இருந்தபோதிலும் தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து தமிழர்களின் கலாசாரத்தை பேணி காக்கின்ற வகையில் செயல்பட்டதின் காரணமாக வும், தமிழக அரசு சட்ட சபையில் ஜல்லிக்கட்டு க்கான தனி தீர்மானத்தைக் கொண்டு வந்து தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதாலும் தற்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கின்ற தீர்ப்பு பீட்டா அமைப்பு களுக்கு கொடுக்கின்ற பதிலடியாக இருக்கும். எனவே இந்த தீர்ப்பை வரவேற்று உலகம் முழு வதும் இருக்கின்ற தமிழர்கள் கொண்டாடு வோம். இவ்வாறு அவர் கூறினார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்