என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வியாபாரி சாவு
- குருக்கள்பட்டியை சேர்ந்த அய்யாத்துரை மளிகை கடை நடத்தி வந்தார்.
- அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 65). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அங்குள்ள மெயின் ரோட்டில் அய்யாத்துரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அய்யாத்துரை தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். கார் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.
அதை ஓட்டி வந்த வேப்பங்குளத்தை சேர்ந்த அருணாசலம் மற்றும் அவருடன் வந்த 2 பேர் என 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அய்யாத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்