search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞரணி அமைப்பாளர்களுடன் அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டம்
    X

    இளைஞரணி அமைப்பாளர்களுடன் அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டம்

    • கட்சிப் பணிகள் குறித்து மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம்.
    • கோவையில் 14-ந் தேதி நடத்த உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியின் மாவட்ட மாநகர, மாநில அமைப்பாளர். துணை அமைப்பாளர்கள் செய்து வரும் கட்சிப்பணிகள் குறித்து மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்.

    தற்போது 5-வது மண்டலத்தில் உள்ள நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தை கோவையில் 14-ந் தேதி நடத்த உள்ளார். கோவை லீ-மெரிடியன் ஓட்டலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு வரை இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    முதலில் நீலகிரி மாவட்டம், அதன் பிறகு திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கட்சி பணிகள் குறித்து வெளியான புகைப்பட கோப்புகளையும் உடன் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×