search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை முன்னெச்சரிக்கை: சப்-கலெக்டர் நேரில் சென்று ஆய்வு
    X

    பருவமழை முன்னெச்சரிக்கை: சப்-கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

    • கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    பொன்னேரி:

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அதிகாரிகள், கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    பின்னர் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், ஆண்டார் மடம் பேரிடர் கால புயல் பாதுகாப்பு மையம் கட்டிடத்தினை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    அப்போது கட்டிடம் பழுதடைந்து, மின்விசிறி இயங்காமலும் டியூப்லைட் எரியாமலும் தண்ணீர் வசதி இன்றி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இரு்நததால் சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×