என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
புளியங்குடியில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் கைது
- மாணவியின் தாயாரை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
- மனவிரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், மாணவியின் தாயாரை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண் மற்றொரு நபருடன் பழக்கத்தில் இருந்து வந்ததாகவும், அதற்கு அவரது உறவினர் பெண் ஒருவர் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவிரக்தி அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார், அவருடன் பழக்கத்தில் இருந்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்