search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்காரர் மீது கொலை வெறி தாக்குதல்: பெண் உள்பட 4 பேர் கைது
    X

    போலீஸ்காரர் மீது கொலை வெறி தாக்குதல்: பெண் உள்பட 4 பேர் கைது

    • போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அருகே கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது தம்பி பிரதீப். இவர்கள் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வில்லியனூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு வசந்த் மற்றும் வில்லியனூர் போலீசார் கோபாலன் கடை பகுதிக்கு சென்றனர். வில்லியனூர் போலீசாரை சற்று தூரத்தில் நிற்க வைத்து விட்டு சதீஷ் வீட்டுக்கு போலீஸ் ஏட்டு வசந்த் சென்றார்.

    அங்கு சதீசை மடக்கி பிடித்து கை விலங்கிட்டு போலீஸ் ஏட்டு வசந்த் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது சதீசின் மனைவி ராஜேஸ்வரி சதீசை அழைத்து செல்ல விடாமல் தடுக்க முயன்றார்.

    மேலும் சதீசின் தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி, ராஜேஸ்வரி, சதீஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு வசந்த்தை சரமாரியாக தாக்கினர். அதோடு குக்கரின் மூடியால் வசந்த்தின் முகத்தில் குத்தினர். இதில் நிலை குலைந்து போன வசந்த் அலறல் சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வில்லியனூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த போலீஸ் ஏட்டு வசந்த்தை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி சதீஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி, தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×