search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வடகிழக்கு பருவ மழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    வடகிழக்கு பருவ மழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

    • பருவமழை முன்னேற்பாடுகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் இன்று நடத்தினார்.
    • வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. அனேகமாக வருகிற 15-ந்தேதிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் பேரிடர் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., தீய ணைப்பு துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? அதை விரைந்து முடிக்க வேண்டும். வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

    இதுதவிர பருவமழை யால் ஏற்படும் சேதங்களை கையாள தேவையான உபகரணங்களை கையி ருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

    மரம் விழுந்தால் அதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான எந்திரங்கள், மீட்பு பணிக ளுக்கான படகுகள், ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை யான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

    சென்னையில் மழை வெள்ளத்தை தடுக்க அடையாறு, கூவம் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தவும் அறிவுரை வழங்கினார்.

    கடந்த ஆண்டு கனமழையால் சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த 2 மாவட்டங்களிலும் வெள்ள தடுப்பு பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    Next Story
    ×