search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்

    • சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்' நாளை நடைபெற உள்ளது.
    • மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் அடையுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்' நாளை (14-ந்தேதி) 11.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1-ல் நடைபெற உள்ளது.

    எனவே மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் வந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் அடையுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×