search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் அருகே விபத்து இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்
    • கேஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது

    குன்னம்,

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டத்துர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சஞ்சீவி மகன் வினோத்(வயது19), ராஜி மகன் ராம்(20), செல்வராஜ் மகன் ஆனந்த்(22), நண்பர்களான இவர்கள் பெரம்பலூர் துறையூர் சாலையில், அடைக்கம்பட்டி கிராமத்தில் டி.களத்தூர் பிரிவு சாலை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திவிட்டு, டாஸ்மாக் கடையில் இருந்து வரும் மண் பாதை வழியாக பிரதான சாலைக்கு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அப்போது, பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற டேங்கர் கேஸ் லாரி இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இந்த திடீர் சாலை விபத்தில், வினோத்தும் ராமும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் நிலவியது.மேலும் விபத்துக்கு காரணமான கேஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த அத்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராஜா (37), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்
    • மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மில்லத் நகரை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 38). இவர் சம்பவத்தன்று இரவு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன் பேரையூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த மங்கலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் 

    • பசும்பலூர் கிராமத்தில் சோகம் வயலுக்குச் சென்ற விவசாயி மின்வேலியில் சிக்கி பலி
    • வ.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் அடுத்த பசும்பலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் அதே ஊரைச் சேர்ந்த பிச்சைபிள்ளை என்பவரின் வயலில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பிச்சைப்பிள்ளை என்பவரின் மக்காச்சோள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக காலை சுமார் 8 மணி அளவில் சென்றார் என கூறப்படுகிறது. பின்னர் வயலின் உரிமையாளர் ராமச்சந்திரனை தேடிய போது காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ராமச்சந்திரன் வயலில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து வ.களத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திட்டமிட்ட செயலா ?அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பூஜை தினத்தன்று நடந்த இந்த சம்பவம் அந்த ஊர் மக்களை பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

    • பெரம்பலூரில் கார் மோதி மூதாட்டி பலியானார்
    • விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூா் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67). இவர் கடந்த 16-ந்தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூர்-காரை பிரிவு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த காா் எதிர்பாராதவிதமாக மூதாட்டி தனலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குன்னம் அருகே 3 பவுன் நகைகள் திருட்டு போனது
    • சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 29). சரவணன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் பச்சையம்மாள் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி உள்ளார். பின்னர் விடியற்காலை 5.30 மணிக்கு அறையின் கதவை திறக்க முயன்றபோது கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவரது சத்தம்கேட்டு மாமியார் பாக்கியம் கதவை திறந்தார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த பெட்டி திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 2½ பவுன் சங்கிலி மற்றும் ½ பவுன் மோதிரத்தை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
    • துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையிலும் மற்றும் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மண்டல ஊர்க்காவல் படை தளபதி அரவிந்தன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

    பெரம்பலூரில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் புதுபஸ் நிலைய வளாகத்தில் குழந்தை திருமணங்களே இல்லாத இந்தியா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்தோ டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முகமது உசேன் தலைமை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், கிருஷ்ணா தியேட்டர், மகளிர் கலைக்கல்லூரி, மருத்துவமனை, பள்ளி வளாகங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    இந்தோ டிரஸ்ட் சார்பில் குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா என்ற தலைப்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகரம், கிராமங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 50 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் டிரஸ்ட் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட பிரச்சாரம் செய்தனர். முடிவில் மேலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

    வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால்மரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

    குன்னம்,  

    பெரம்பலூர் மாவட்டம் சாத்தா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஜெயந்தி. இருவருக்கும் சந்ரூ என்கிற கோபால்சாமி(வயது 19) என்ற மகன் உள்ளார். இவர் ஈஈஈ இன்ஜினீயரிங் படித்து உள்ளார். அவ்வப்போது டிராக்டரை கொண்டு உழவு செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தந்தை ஏழுமலை, கோபால்சாமியை வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அவர் தனது கிராமத்தில்தான் விவசாய தொழில் பார்ப்பேன் என்று கூறி வெளிநாடு செல்வதற்கு மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு தந்தை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகன் கோபால்சாமி, வயல் வெளி பகுதிக்கு சென்று அங்குள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை காணவில்லை என்று தாய் ஜெயந்தி தேடி அலைந்த போது தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டுள்ளனர். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமாந்துறையில் பட்டப்பகலில் துணிகரம்ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் வழிப்பறி

    அகரம்சிகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் , திருமாந்துறை கிராமம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பத்மபிரியா (35). இவர்களது மகள் அஸ்வந்திகாஸ்ரீ(10).

    பத்மபிரியா திருமாந்து றையில் உள்ள வங்கியில் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். இதற்கான வட்டியை கட்டுவதற்காக தனது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, தனது மகளுடன் வங்கிக்கு சென்றுள்ளார்.

    வங்கியில் வட்டி கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, பணம் கட்டுவதற்காக காத்திருந்து உள்ளார். அப்போதுஅவரின் மகள் அஸ்வந்திகாஸ்ரீ ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்க கேட்டு ள்ளார். இதற்காக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெ ட்டுக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், பத்மபிரியா கையில் வைத்திருந்த பண ப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா சத்தமிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாக சென்று மறைந்து விட்டனர். இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் பத்ம பிரியா புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மங்கள மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்ப குதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை பறித்து சென்ற 2 இளைஞர்க ளின் உருவம் அதில் தெளி வாக பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த இரு வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    பெரம்பலூரில் பஸ் - வேன் மோதி விபத்துதிருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய பால்

    குன்னம்,  

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே இரூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் கேன்களுடன் லோடு வேன் ஒன்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று உள்ளது. பெரம்பலூர் ஆலத்தூர் கேட், செட்டி குளம் பாலதண்டாயுதபாணி கோவில் ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பஸ் ஒன்று வேனின் மீது மோதி உள்ளது. இதில் வேன் நிலைக்குலைந்துள்ளது. இதன் காரணமாக கேன்கள் அனைத்தும் சரிந்து கவிழந்துள்ளது. இதனால் கேன்களில் வைக்கப்பட்டிருந்த பால் ரோட்டில் ஆறாக ஓடியது.

    இதில் வேனில் பயணம் செய்த 3 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வேன் விபத்துக்கு ள்ளானதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். 

    மலையாளபட்டியில் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் வருகிற 25-ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.

    தலைவாசல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன் பெற போகின்றனர். நமது மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற உயரிய நோக்கோடு டத்தோ பிரகதீஸ்குமார் இதனை முன்னெடுத்து வருகிறார்.

    இதனால் ஒவ்வொரு கிராம பகுதி விவசாயிகளும் இந்த குழுவில் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர்.அதன்படி மலையாளபட்டியில் பகுதியில் 5 பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து பெயர்ப்பலகை திறக்கப்பட்டது. டத்தோ பிரகதீஸ்குமார் பெயர்ப்பலகையை திறந்துவைத்து விவசாயிகள் மத்தியில் பேசினார்.அப்போது அவர்,விவசாயத்தில் முன்பு போல் லாபம் என்பது இல்லை. உங்களது பிள்ளைகளை சொந்தமாக தொழில் தொடங்க ஊக்கப்படுத்துங்கள். நான் மட்டும் உயர்ந்த இடத்திற்கு வந்தால் போதாது.

    நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.எனவே நம்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.அதனால் காய்கறிசந்தை திறப்பு விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டும்.இவ்வாறு டத்தோ பிரகதீஸ்குமார் பேசினார்.முன்னதாக அங்குள்ள கோவிலில் டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் மலையாளபட்டி பகுதி விவசாயிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • மழை காலங்களில் நீர் தேங்கியுள்ளது,
    • உறுதி அளித்ததன்பேரில் மக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் உள்ள அன்பு நகரில் தெருக்கள் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் நீர் தேங்கியுள்ளது, தெரு விளக்குகள் எரிய வில்லை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவி மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.

    ×