search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலில் புகுந்த மர்மகும்பல் பொருட்களை அடித்து நொறுக்கியது
    • வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாமுண்டிதுரை (வயது 39). இவரது மனைவி பிரியா. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

    மாமுண்டிதுரை கல்பாடி பிரிவு சாலை அருகே ஓட் டல் வைத்து நடத்தி வருகி றார்.இந்த நிலையில் தீபாவளி அன்று அதிகாலையில் மாமுண்டி மற்றும் பணியா ளர்கள் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல், தங்களது முகத்தை துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, ஓட்ட லுக்குள் புகுந்தது.இவர்களை பார்த்த மாமுண்டிதுரை மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சி யடைந்து அவர்களை யார் நீங்கள்? எதற்காக முகத்தை மூடியுள்ளீர்கள் என்று கேட்டனர்.ஆனால் அந்த கும்பல் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகள், டி.வி. ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    இந்த சம்பவம் குறித்து மாமுண்டிதுரை பெரம்ப லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு ெசய்த போலீ சார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.இந்த சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா? என பல்வேறு கோண ங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஓட்டலில் புகுந்து பொருட்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைராலாகி வருகிறது.

    • பெரம்பலூரில், நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம், பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தீபாவளியன்று தீ பற்றி எரிந்த கூரை வீடு
    • மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் ராசி நகரில் வசித்து வருபவர் கலியபெருமாள் மகன் கோவிந்தராஜ் (58), பந்தல் அமைப்பு காண்ட்ராக்டர் . அருகில் இருக்கும் தமக்கு சொந்தமான வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கூரை வீடு மின் கசிவால் நேற்று தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர் .

    மேலும் கூரை வீட்டில் பந்தல் போடும் பணிக்கான துணிகள், சோபா ஆகிய பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூர் அருகே கார்-பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்
    • பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர், 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் இவரது மகன் வேல்முருகன் (வயது 28). இவர் நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள நண்பரை பார்த்து விட்டு பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

    அப்போது பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள மட்ட பாறை கிராமத்தில் ஒரு டீக்கடை முன்பு வந்த போது பெரம்பலூரில் இருந்து துறையூர் சென்ற அரசு பேருந்து எதிர்பாரா விதமாக வேல்முருகன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார். இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த யாருக்கும் காயம் இல்லை. நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது.

    அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். பலியான வேல்முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் குடும்ப தகராறு காரணமாக என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர், ஜமாலியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மகன் நிர்மல் குமார் (வயது 33). இவர் சென்னையில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் பத்மஸ்ரீ (செவிலியர்) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆகி சமீரா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளார்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மல் குமார் பெரம்பலூருக்கு வந்தார்.

    அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி பத்மஸ்ரீ கோவித்துக் கொண்டு வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் மது போதையில் தனது வீட்டில் இருக்கும் துண்டை எடுத்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    இதைக் கண்ட மனைவி சத்தம் போட மேல் வீட்டில் இருந்த நிர்மல் குமாரின் தாயார் சாந்தி என்பவர் கீழே வந்து பார்த்து கத்தியால் துண்டை அறுத்து மகனை கீழே இறக்கி உள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டிற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மல் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பெரம்பலூர் பி.ஜே.பி. முன்னாள் மாவட்ட செயலாளரின் 2 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது 50). இவர் பி.ஜே.பி. கட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது பி.ஜே.பி.யில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் தனபால் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட எதிரே குடியிருக்கும் வரதராஜ் என்பவர் கூச்சலிட்டு உள்ளார். அவரின் கூச்சலை கேட்டு தனபால் வெளியே வர எந்தனித்து உள்ளார். ஆனால் வீட்டின் கதவை திறக்க முடியவில்லை.

    இதற்கு காரணம் வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர பொது மக்களுடன் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த தனபால், தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து கருகியது.

    முன்விரோதம் காரணமாக அவரது2 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் அருகே உள்ள சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
    • தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆடுகள் விற்பனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் வாரந்தோறும்  ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களை விட, தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை களைகட்டும்.அதன்படி நாளை தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் திருச்சி, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இச்சந்தைகளுக்கு கொண்டு வந்தனர்.இவற்றை வாங்கி செல்வதற்கு ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.அவர்கள் போட்டிப்போட்டு வாங்கிதாலும், ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததாலும் ஆடுகளின் விலை அதிகரித்தது.ஒரு நாள் ஆடு விற்பனை ரூ.2 கோடி என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • போதைக்கு அடிமையாகி வெளிநாட்டில் வேலை இழந்து ஊர் திரும்பிய பெரம்பலூர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ேவப்பந்தட்டை தாலுக்கா வெண்பாவூர் பிரிவு சாலை பகுதியை சேர்ந்தவர் ராம ராஜ் (வயது 33).இவரது மனைவி மல் லிகா. இவர்களுக்கு ராகவன் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.இந்த நிைலயில் ராமராஜ் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, இறந்தவரின் உறவினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் கூறுகையில்,வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த ராமராஜ், அங்கு போதைக்கு அடிமை யான தோடு சரியாக வேலை க்கு செல்லாமல் இருந்து ள்ளார். இதனால் வேலை செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியு ள்ளது.இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெர ம்பலூர் திரும்பிய அவர், மன விரக்தியில் வீட்டிற்கு செல்ல தயக்க த்தில் தற்கொலை செய்து கொண் டிருக்கலாம் என தெரிய வருகிறது. தற்கொலைக் கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்ற னர்.

    • பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது
    • மதிப்பெண் விவரங்களின் பட்டியலை அனுப்பி வைக்க அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த அனைத்து வகை அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களின் குழந்தைகள் கடந்த மார்ச் 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பில் 500க்கு 480 மதிப்பெண்களுக்கும், 12-ம் வகுப்பில் 600-க்கு 580 மதிப்பெண்களுக்கும் அதிகம் பெற்ற முதல் 3 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    எனவே கூட்டுறவுத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுவோரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் ஒப்புதல் செய்யப்பட்ட மதிப்பெண் விவரங்களின் பட்டியலை (அட்டெஸ்ட் காப்பி) வரும் 15-ந் தேதிக்குள் செயலாட்சியர் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிம், எண் 5, கே.ஆர்.காம்ப்லக்ஸ், துறைமங்கலம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 6 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி கல் குவாரி உரிமம் கோரி ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு அலுவலர்கள், காவல்துறையினரை தாக்கியும், அரசு அலுவலகங்களில் உள்ள தளவாடப் பொருள்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், கட்சியின் அமைப்புச் செயலாளர் அருணாசலம், எம்ஜிஆர் அணி மாவட்டச் செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் அமைச்சர் மோகன், நகரச் செயலாளர் ராஜபூபதி உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பெரம்பலூரில்டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    பெரம்பலூர் 

    பெரம்பலூரில் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிவண்ணன் தலைமை வகித்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) கலாராணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் (மேல்நிலை) சுரேஷ், இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து பேரணியினை தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார். இந்த பேரணி மாவட்ட தலைமை மருத்துவமனை, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராசர் வளைவு, சங்கு பேட்டை, கடைவீதி வழியாக வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் கவுன்சிலர்கள் மற்றும் ஜூனியர்கள் கோஷமிட்டும், பதாகைகள் ஏந்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மேல்நிலை, உயர்நிலை,மெட்ரிக், நடுநிலை ஆகிய 38 பள்ளிகளில் இருந்து 497 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை கன்வீனர் துரை, வேப்பூர் மாவட்ட பொருளாளர் ராஜா, மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஜே.ஆர்.சி. மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட கன்வீனர் ஜோதிவேல் நன்றி கூறினார். 

    பெரம்பலூர்டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் , இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தலையிட்டு இறக்கு கூலி உயர்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், மதுபான உற்பத்தி நிறுவனங்களும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில்வரும் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    ×