என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 வகுப்புகள் இன்று தொடங்கியது: 2 நாட்களுக்கு புத்துணர்வு பயிற்சி
- 19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வகுப்புகள் திறக்கப்பட்டதால் பிளஸ்-2 மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர்.
- இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 சேரும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 27-ந்தேதி வகுப்புகள் தொடங்கும்.
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2021-2022) பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பிளஸ்-1 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதற்கிடையே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி வளாகங்களில் அனைத்துவித முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வகுப்புகள் திறக்கப்பட்டதால் பிளஸ்-2 மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்றும் நாளையும் வழக்கமான பாடங்கள் நடத்தக்கூடாது.
அதற்கு பதிலாக அவர்களுக்கு 2 நாட்களுக்கு புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 சேரும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 27-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்