என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை எதேச்சையாக நடந்தது- மின்பகிர்மான கழக தலைவர் தகவல்
- வி.ஐ.பி. வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் உடனடியாக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
- 40 நிமிடத்துக்கு பிறகு மாற்று ஏற்பாடு மூலம் பரங்கிமலை பகுதிகளுக்கு மின்சப்ளை கொடுக்கப்பட்டது.
சென்னை:
சென்னைக்கு நேற்றிரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்தபோது அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அவரை வரவேற்க ரோட்டில் இருபுறமும் திரண்டிருந்த பா.ஜ.க.வினர் இதனால் கடும் ஆவேசம் அடைந்தனர். அமித்ஷா அங்கிருந்து சென்றதும் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அரசு திட்டமிட்டு மின்சப்ளையை துண்டித்ததாக கூறி சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
வி.ஐ.பி. வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் உடனடியாக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. உடனே மின் உற்பத்தி மின்பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்லக்கானி போரூர் துணைமின் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
தாம்பரம்-கடப்பேரி மின்நிலையத்தில் இருந்து போரூர் துணைமின் நிலையத்துக்கு வரும் மின்கம்பி காற்று மழை காரணமாக அறுந்து விழுந்ததால் மின் சப்ளை துண்டிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.
இதனால் 40 நிமிடத்துக்கு பிறகு மாற்று ஏற்பாடு மூலம் பரங்கிமலை பகுதிகளுக்கு மின்சப்ளை கொடுக்கப்பட்டது.
இதுபற்றி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
சென்னைக்கு போரூர் சப்-ஸ்டேஷன் மூலமாக பூந்தமல்லி, போரூர், கூவத்தூர், பரங்கிமலை ஏரியாவுக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது.
இதில் போரூருக்கு மின் சப்ளை 2 லட்சத்து 30 ஆயிரம் கிலோவாட் கொண்ட ஒரு லைன் கடப்பேரியில் இருந்து வருகிறது. அந்த லைனில் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் இரவு 9.34 மணிக்கு கரண்ட் கட் ஆகி பிரச்சினையானது. இத னால் இரவு 10.12 மணிக்கு வேறு வழியாக கரண்ட் கொடுத்தோம்.
கே:- உள்துறை மந்திரி அமித்ஷா வரும்போது 'கரண்ட் கட்" ஆகி விட்டதே?
ப:- இது எதேச்சையாக நடந்தது. மின்சார லைன் தடைபட்டதால் இது நிகழ்ந்துவிட்டது. இதனால் பரங்கிமலை, போரூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மின்சாரம் கட் ஆகிவிட்டது. இரவு 9.34 மணி முதல் இரவு 10.12 மணி வரை மின்தடை ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் இந்த நேரம் பதிவாகி உள்ளது. எங்களுக்கு தகவல் தெரிய வந்ததும் உடனே மாற்றுப்பாதை மூலமாக மின்சப்ளை சரி செய்து கொடுத்தோம்.
கே:- வி.ஐ.பி. வருகிறபோது சரியான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா?
ப:- ஆமாம். உள்துறை மந்திரி சென்னை வருகிறார் என்று தெரிந்ததும் 24 மணி நேரமும் மின்சாரத்தை கண்காணிக்கும் வகையில் துணை மின்நிலையங்களில் அதிகாரிகள் இருந்தனர். அப்போதும் எதேச்சையாக அவர் வரும்போது மின்தடை ஏற்பட்டுவிட்டது.
ப:- காற்று, மழை தான் காரணம். இரவு நேரம் என்பதால் சரிசெய்ய 30 நிமிடம் ஆகிவிட்டது.
கே:- இதில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
ப:- ஆரம்ப கட்ட விசாரணையில் மின்சார லைன் காற்றில் கட் ஆகி இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக இன்று முழு அளவில் விரிவான விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்