search icon
என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • டீக்கடைக்குள் புகுந்த லாரி இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
    • படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போலீஸ் நிலையத்துக்கு எதிரே ஒரு டீக்கடை, பேக்கரி உள்ளது. இந்த வழியாக வாகனங்களீல் செல்வோர், சுற்றுலா பயணிகள், கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் பேக்கரி முன்பாக வேனை நிறுத்தி டீ குடித்து செல்வது வழக்கம்.

    இன்று அதிகாலை இந்த கடை முன்பாக சென்னை, திருவள்ளூரில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு மாலை அணிந்த பக்தர்கள் வந்த வேன், அதே பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வந்த மற்றொரு வேன், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற மற்றொரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வேன்கள், காரில் வந்த 25 பேர் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், சாலையோரம் நின்றிருந்த 2 வேன், கார் மீதும் பயங்கரமாக மோதியது. மேலும் அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் திருவெல்லைவயல் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (வயது 26), ஊத்துக்கோட்டை பனையன்சேரியை சேர்ந்த ஜெகநாதன் (60), வேனில் அமர்ந்திருந்த ஓம் சக்தி கோவில் பக்தரான சீனிவாசன் மனைவி சாந்தி (55), மதுரவாயல் அன்னை இந்திரா நகர் தெரு சுரேஷ் (34), சென்னை அமைந்தகரை சதீஷ் (24) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    • இதுவரை 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
    • ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த டிசம்பர் 26-ந் தேதி மனித மலம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்தும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாமல் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்த சம்பவத்தினை முதலில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடிநீர் தொட்டி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ச்சியாக அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தாமதமாகி வருகிறது. ஓராண்டை கடந்தும் இயல்பு நிலை இன்னமும் திரும்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

    எங்களுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை தேவை. இந்த சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தில் சாதிப்பிளவுகள் இன்னும் ஆழமாகியுள்ளன என வேதனை தெரிவித்தார்.

    சி.பி.சி.ஐ.டி. துணை போலி சூப்பிரண்டு பால்பாண்டி கூறும்போது, இந்த விவகாரத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமான முறையில் சோதனையும், அதன் அடிப்படையிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

    இவர்களில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்றார்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சி.கே.கனகராஜ் கூறுகையில், கடந்த வாரம் நாங்கள் வேங்கை வயல் கிராமத்திற்கு சென்றோம். ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த வழக்கினை திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக சந்தேகிக்கின்றோம்.

    இப்போதும் தலித் மக்கள் அதிக பயத்தில் இருக்கிறார்கள். நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தோம், ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

    சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. முடிவு இல்லாத தொடர்கதை போல நீளும் வேங்கை வயல் வழக்கு விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்ப செய்யவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.
    • உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சி இளம்பாவயல் கிராம பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

    இதில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதனை அறியாத பழனிக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழத்தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.

    உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் பழனிகுமாரின் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விவசாய கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இன்றி தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலை கள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப் படகு மீன்பிடித்துறை முகத்திலிருந்து 12-ந் தேதி புதன்கிழமை 79 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சின்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (25), குமார் ஆகியோரை சிறைபிடித்து சென்றனர். மேலும் சிறை பிடிக்க ப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • தப்பி ஓடிய ராஜேசை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை ராஜாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி கவுண்டர் (வயது 80). இவருக்கு வேலு (56) சாமிக்கண்ணு( 52) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வேலு மணப்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். ரங்கசாமி கவுண்டரின் மகன்களுக்கு இடையே சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று சாமிக்கண்ணு மகன் ராஜேஷ்(25) ராஜாளிப்பட்டி யில் உள்ள தனது பெரியப்பா வேலுவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சொத்து பிரச்சினை தொடர்பாக அவர் வேலுவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுவை சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த தாத்தா ரங்கசாமி கவுண்டருக்கும் கத்திகுத்து விழுந்தது. பின்னர் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கொலை செய்யப்பட்ட வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி தலைவியாக உள்ளார். ரங்கசாமி கவுண்டருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், துணை போலீஸ் காயத்ரி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய ராஜேசை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை)காலை 8 மணி அளவில் ராஜாளி பட்டி காட்டுப் பகுதியில் அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான ராஜேஷ் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது;-

    எனது தாத்தாவுக்கு கவரப்பட்டியில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதனை கடந்த 6 மாதத்திற்கு முன்பு எங்களுக்கு தெரியாமல் தாத்தா பெரியம்மா (வேலுவின் மனைவி) திருப்பதி பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

    இது தொடர்பாக கேட்க சென்றபோது பெரியப்பா என்னை மதிக்காமல் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன். தடுக்க வந்த தாத்தாவையும் குத்தி விட்டு தப்பி சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான சதீஷ்குமார் அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    • முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
    • சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    விராலிமலை:

    புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் சுகாதாரத்துறை சுணக்கத்தில் உள்ளது. அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது. தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, இறந்து கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது,

    இயற்கை பேரிடர் என்பது ஒன்று தான், இயற்கை பேரிடரை எதிர்கொள்ள திறன் வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான். ஆனால் தி.மு.க. அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது.

    தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை ரொம்ப தாமதமாக இயங்குகிறது. சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    அதேபோல லாரிகளில் வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த இடத்திலும் அது கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை.

    முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். எந்த பேரிடர் வந்தாலும் நோய் தொற்று ஏற்படும் என்பது உலக நியதி. அதனை தடுக்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அரசு எதிர்கொள்ள எந்தவித திட்டமிடலையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்து மக்களை ஏமாற்றி விட முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும். இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை. இனியாவது சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு சென்னையில் சுகாதாரத்தை பேணி காக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீரில் குளோரின் கலந்து உள்ளதா? என்பதை சரி செய்து குளோரின் கலந்து பரிசோதனை செய்து அதன் பிறகு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களின் அத்தியாவசிய பொருளாக உள்ள குடிநீர் மற்றும் பாலுக்கு எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை. தற்போதைய தி.மு.க. அரசின் சரியான திட்டங்கள் இல்லாததால் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திறமையாக கையாளாத காரணத்தால் இத்தகைய நிலைமை சென்னையில் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஏற்கனவே மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

    அதன்படி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ,
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை,

    ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பாரம்பரிய குணமான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் சிறு தானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறும். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    அரசு துறைகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்பு களால் சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளது. இதில் முதல் மூன்று இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கந்தர்வ கோட்டை காந்தி சிலை| பேருந்து நிலையம் மற்றும் புதுகை சாலையில் கட்சி கொடி ஏற்றியும்,வெடி வெ டித்தும் , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரம சிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, தி.மு.க. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தவசு மணி, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பழைய கந்தர்வ கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மெய்குடி பட்டி முருகேசன் ,

    ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பாரதி பிரியா அய்யாதுரை, திருப்பதி, இளைஞர் அணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது.
    • இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் உள்ள ஆ னைக்கொம்பன் தாக்கு தலைக் கட்டுப்படுத்திடவும் அதிக மகசூல் அடைந்திடவும் வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அ றிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தற்போது நிலவும் சீதோ ஷண நிலையால் பு துக்கோட்டை மா வட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஒரு சில பகுதிகளில் ஆனைக் கொம்பன் தாக்குதல் கா ணப்படுகிறது. இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றி விடும்.

    இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதனுடைய புழுப்பருவம் பயிர்களை தாக்குவதனால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். இந்த கிளைப்புகள் வெண்மையாகவோ அல்ல து இளஞ்சிவப்பு நிறமாக வோ குழல் போன்று வெங்காய இலையைப் போல காணப்படும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போல் இருப்ப தனால் இது ஆனைக் கொம்பன் என்று அ ழைக்கப்படுகிறது.

    தாய்ப்பூச்சியானது நீள மான உருளை வடிவிலான ப ளப்பளப்பான முட்டை களை இலையின் அடிப்ப குதியில் இடும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற்பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயி ரில் நெற்கதிர்கள் உருவா காமல் விவசாயிகளுக்கு ம கசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.

    எனவே, வயல்களை க ளைகள் இல்லாமல் தூய்மையாக வைத்தி ருப்பதனாலும், புற ஊதா விளக்குபொறிகளை வைத்து கவர்ந்தும் அழிக்க லாம். தழைச்சத்து உரங்களை பரிந்து ரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தினால் இதன் தாக்கு தலில் இருந்து பாது காக்கப்படும். மேலும், இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை அளவை அதாவது (10 இலைக்கு ஒரு இலை வெங்காயத்தாள் ) விட பாதிப்பு அதிகமாகும்போது மகசூல் இழப்பு ஏற்படும்.

    இதை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்து களான கார்போசல்பான் 25 சதவீதம் பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி - 400 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதே னும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரி வாக்க மையத்தினை அணு கிட கேட்டுக் கொள்ளப்படு கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சீமை கருவேல மரங்கள் அகற்று தல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார்.
    • புதுக்கோட்டையில் இது போன்றே 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி வீதம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, தென்னதிரை யன்குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், சீமை கருவேல மரங்கள் அகற்று தல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தென்னதிரையன் குளத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில், சீமைக்கருவேல் மரங்கள் அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்க பட்டது. குளங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்டு, பழமரக்கன்று கள் நடப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்குளத்தில் சேகரமாகும் நீர் வீணாகா மல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வழிவகை ஏற்படும். மேலும் பழமரக்கன்றுகள் நடுவதன் மூலம் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள குரங்குகள் அனைத்தும் இந்த பழமரக்கன்றுகள் வளர்ந்தவுடன், இதில் உள்ள பழங்களை சாப்பிடு வதற்காக இங்கு வந்து வாழ துவங்கும். மேலும் இது குரங்குகளுக்கு வாழ்வ ழிக்கும் திட்டமாகவும் இருக்கும்.

    புதுக்கோட்டையில் இது போன்றே 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி வீதம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் தொடர்ந்து மீதமுள்ள 484 கிராம ஊராட்சிகளிலும் தொடங்கிட அரசு அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் குளங்கள், வாய்க்கால்கள், ஊரணிகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குநர் பெரிய சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) இளங்கோ தாயுமானவன், வட்டாட்சியர் கவியரசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×