search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    10 நாட்களுக்கு பின்பு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
    X

    10 நாட்களுக்கு பின்பு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

    • ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • இன்று காலை மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் பெற்று கொண்டு 500-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் கடந்த 19-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு, 21-ந் தேதி அது புயலாக மாறியது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேசுவரம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    இதனால் ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் துறைமுகங்களில் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கடலில் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதன் காரணமாக கடலுக்கு செல்ல மீனவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி அவர்கள் இன்று காலை மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் பெற்று கொண்டு 500-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.

    10 நாட்களுக்கு பின்பு இன்று (28-ந் தேதி) கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.

    Next Story
    ×