search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தற்கொலையா? போலீசார் விசாரணை
    • யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி ஜங்ஷன் அருகே உள்ள பக்கிரிமலை பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர். மது அதிகமாக குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 62), தனியார் பள்ளி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (51). இவர் வழக்கம்போல் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு நூறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாணியம்பாடி கோர்ட்டு வளாகத்தில் நடந்தது
    • தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் நகினாதபசூம். இவருக்கும் சையது முனவர் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நகினாதபசூம் ஜீவானம்சம் கேட்டு வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக நேற்று நகினா தபசூம் கோர்ட்டுக்கு வந்த போது அவரை, கணவர் சையத் முனவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோர்ட்டு வளாகத்தில் வைத்து தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். பின்னர் இதுதொடர்பாக நகினா தபசூம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சையத் முனவர் உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாரூக் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவர் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    • கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில், சோளிங்கர் சாலையில் பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாலாஜா. மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் அமுதா தலைமையில் கோவிலுக்கு வந்த அதிகாரிகள் கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.

    இது பற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர்,பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

    பக்தர்கள் சிலர் கோவிலில் உண்டியல் இருப்பது தான் பிரச்சனை என்றால் அதனை அகற்றி விடுகிறோம் என கூறி சிமெண்டால் கட்டப்பட்டிருந்த உண்டியல் மேடையை இடித்து அகற்றினர்.

    கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கோவில் முன்பாக பக்தர்கள் கோஷமிட்டதாலும், பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்கவே அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவில் அருகில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இடியுடன் கூடிய கனமழை
    • சிகிச்சை முடிந்து பத்திரமாக வீடு திரும்பினர்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

    அப்போது சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது மின்னல் தாக்கியபோது அவ்வழியே சென்ற 8-ம் வகுப்பு படிக்கும் கோதாவரி, 6 -ம் வகுப்பு படிக்கும் செல்வி, குருபிரசாத் ஆகியோர் கீழே விழுந்து மயக்கமடைந்தனர்.

    இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் 3 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு சிகிச்சை முடிந்து 3 பேரும் பத்திரமாக வீடு திரும்பினர்.

    • போலீசில் புகார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சலீம்பாஷா(37). இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு , தனது செல்போனில் ஆபாச படம் காட்டி, பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது. மேலும் சிறுமியிடம் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சலீம்பாஷாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்
    • கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய ஆதார் அட்டை பெற பள்ளி செல்லாமல் விடுப்பு எடுத்து நெமிலி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வந்து காத்து கிடந்தனர்.

    மேலும் ஆதார் அட்டை விண்ணப்பிக்க முடியாமல் பல மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    இதனால் விரக்தியடைந்த பெற்றோர்கள் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தினர்.

    • பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • தலைமை ஆசிரியரிடம் தீவிர விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட கொந்தங்கரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டுவருகிறது.

    இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கோவிந்தராஜிலு என்பவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் பாடம் நடத்தாமல் இருக்கையில் அமர்ந்து இருப்பதாக கூறி கிராம பொதுமக்கள் வட்டார கல்வி அலுவலருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியரை வேறு ஊருக்கு மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் முதல் - அமைச்சர் தனிப்பிரிவு, கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று கொந்தங்கரை பள்ளிக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பிரேமலதா நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

    அப்போது மாவட்ட கல்வி அதிகாரியிடம் தலைமை ஆசிரியரை வேறு ஊருக்கு மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் ஜஸ்வந்த் (வயது 15). இவர் ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பள்ளியில் பிளஸ் - 1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெல் டவுன்ஷிப் பகுதியில் இருந்து அரசு பஸ்ஸில் வந்தார். அப்போது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பஸ் படிகட்டில் இருந்து திடீரென மாணவன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் ஜஸ்வந்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் வளர்மதி தகவல்
    • 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் தலா ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4.0 தொழில் நுட்ப மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாறிவரும் தொழிற்சாலைகள் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு 4.0 தொழில்நுட்ப மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை தொழிற் பயிற்சி நிலை யத்தில் குறுகிய கால 4 மாத மற்றும் 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்ப டவுள்ளது.

    அதேபோன்று அரக்கோணம் தொழிற் பயிற்சி நிலையத்திலும் வகுப்புகள் விரைவில் நடத்தப்படவுள்ளது.

    இந்த தொழில்நுட்ப மையங்களின் மூலம் பயிற்சி பெறும் பயிற்சி யாளர்கள் பயிற்சி முடித்தவுடன் முன்னணி தொழிற்சா லைகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும் மற்றும் சுயமாக தொழில் தொடங்கவும் பயனுள்ள வகையிலும் இந்த நவீன தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்க பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டில் ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 4 பாடப் பிரிவுகளின் கீழ் 128 மாணவ மாணவி களும், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 பாடப் பிரிவுகளின் கீழ் 104 மாணவர்களும் என மொத்தமாக 232 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் இந்த 4.0 தொழில் நுட்ப மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
    • தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பி.டி.ஓ அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் தீனதயாளன், பி.டி.ஓக்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் போன்றவற்றை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் வட்டார ஒருங்கினைப்பாளர்கள், கோமதி, சுகந்தி, ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரில் முன்பக்க கண்ணாடியை‌ உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் ரூ.15 லட்சம் பறித்தனர்.
    • மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தாங்கள் வந்த பதிவு எண் அகற்றப்பட்ட காரில் தப்பி சென்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் பைனான்ஸ் நடத்தி வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சரவணன் ரூ.15 லட்சம் பணத்துடன் காரில் சித்தூரில் இருந்து ராணிப்பேட்டை அம்மூர் நோக்கி வந்தார். காரை ராணிப்பேட்டை அடுத்த பெரிய தாங்கல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சுந்தர் (36) என்பவர் ஓட்டி வந்தார்.

    அம்மூர் செல்லும் சாலையில் கத்தாரிகுப்பம் கிராமம் வனத்துறை செக் போஸ்ட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 4 பேர் அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்தனர்.

    முந்தி சென்று சரவணனின் காரை மடக்கினர்.

    காரில் முன்பக்க கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் ரூ.15 லட்சம் பறித்தனர்.

    இதை தடுக்க முயன்ற சரவணன்,டிரைவர் சுந்தர் ஆகியோரை மர்ம நபர்கள் தாக்கியனர். இதில் சரவணனுக்கு வலது கையிலும், சுந்தருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து இவர்கள் கூச்சலிட்டனர். மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தாங்கள் வந்த பதிவு எண் அகற்றப்பட்ட காரில் தப்பி சென்றனர்.

    கும்பல் சென்ற கார் கத்தாரிகுப்பம் கிராமத்தின் அருகே வயல்வெளியில் சேற்றில் சிக்கியது. அந்த காரை அப்படியே விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    காரிலிருந்து தப்பி ஓடிய கும்பல் வனப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழிப்பறி தொடர்பாக ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பதிவு எண் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×