search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது
    X

    16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது

    • சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி குமர வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ந்தேதி சிறுமியின் பெற்றோர் மஞ்சள் நீர் விழாவுக்கு வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர்.

    இந்நிலையில் சிறுமி உடல் சோர்வாக இருந்ததை கண்டு அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் வயிற்றுவலிக்கான காரணம் குறித்து கேட்டனர். இதற்கு அச்சிறுமி போரூரை சேர்ந்த சிவலிங்கம் மகன் குமரவேல் (வயது 23) என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி, வீட்டுக்கு அழைத்து சென்று கட்டாய உடலுறவில் ஈடுபட்டதும், இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்.

    இது குறித்து சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குமர வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    Next Story
    ×