search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சார ரெயில்கள் குறைப்பு: கூடுதலாக 70 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    மின்சார ரெயில்கள் குறைப்பு: கூடுதலாக 70 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • கூடுதலாக 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை.

    சென்னை:

    மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதலாக பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பஸ்களும், பல்லாவரம் பஸ்நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பஸ்களும், தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பஸ்களும் என மொத்தம் 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


    மேலும், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்து மிஷன் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் வருகிற 18-ந் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×