search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    செம்பட்டி ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகள், கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500 முதல் ரூ.10000 வரை விற்பனையானது.

    இதேபோல் நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது. வழக்கமான வியாபாரத்தை விட சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைத்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×